மெகா ஹிட் பட இயக்குநருடன் இணையும் சிவகார்த்திகேயன்.!

Default Image

சிவக்கார்த்திகேயன் அடுத்ததாக கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பட இயக்குநரான தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

சிவக்கார்த்திகேயன், தமிழ் சினிமாவின் பிரபல முன்னணி நடிகராக திகழ்பவர். இவர் கடைசியாக மித்ரன் சரவணன் இயக்கத்தில் ஹீரோ படத்தில் நடித்தார். தற்போது இவர் இரண்டு படங்களில் நடித்து வருகிறார். ‘இன்று நேற்று நாளை ‘ படத்தை இயக்கிய ரவிக்குமாரின் ‘அயலான்’ படத்திலும், கோலமாவு கோகிலா என்ற வெற்றி படத்தை இயக்கிய நெல்சனின் ‘டாக்டர்’ படத்திலும் நடித்து வருகிறார்.காமெடியனாக களமிறங்கிய சிவகார்த்திகேயன் தற்போது கமர்ஷியல் படங்களில் கலக்கி வருகிறார்.

இந்த நிலையில் இவரது அடுத்த படத்தினை இயக்குவது யார் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் பல இயக்குநர்களின் பெயர்கள் அடிப்பட்டது. தற்போது தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் அடுத்ததாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் துல்க்கர் சல்மான் நடிப்பில் சமீபத்தில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்று ஹிட்டானது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சிவகார்த்திகேயனுக்காக தேசிங்கு பெரியசாமி தனது டீமுடன் இணைந்து குற்றாலத்தில் சென்று திரைக்கதை எழுதும் பணியை தொடங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் இதனை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்