நடிகர் சிவகார்த்திகேயன் தனது 36 வது பிறந்த நாளை டான் படத்தின் படக்குழுவினரோடு இணைந்து கொண்டாடி மகிழ்ந்துள்ளார். அதற்கான புகைப்படங்கள் சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் கடந்த 2012ஆம் ஆண்டு வெளியான மெரினா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் சிவகார்த்திகேயன். இந்த படத்தை தொடர்ந்து 3,மனம் கொத்தி பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, காக்கி சட்டை, ரஜினிமுருகன், ரெமோ, வேலைக்காரன், சீமராஜா, ஹீரோ, நம்ம வீட்டு பிள்ளை, என படிப்படியாக வெற்றிப்படங்களில் நடித்து ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமாகி தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக இருக்கிறார்.
இவருக்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளத்தை சொல்லியே தெரிய வேண்டாம்.இந்த நிலையில் தற்போது இவர் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் டாக்டர் திரைப்படத்திலும் இயக்குனர் ரவிகுமார் இயக்கத்தில் அயலான் என்ற திரைப்படத்திலும் நடித்து முடித்துள்ளார்.
இதில் டாக்டர் திரைப்படம் வருகின்ற மார்ச் மாதம் 26 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அதனை தொடர்ந்து திரைப்படம் வருகின்ற கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்ததாக தற்போது இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் டான் என்ற படத்தில் நடித்து வருகிறார். படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.
மேலும் இன்று நடிகர் சிவகார்த்திகேயன் 36 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள், பிரபலங்கள், ட்விட்டரில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். மேலும் தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் டான் படத்தின் படக்குழுவினரோடு தனது பிறந்த நாளை கொண்டாடி மகிழ்ந்துள்ளார். அதற்கான புகைப்படங்கள் சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…