நடுவானில் இருந்து 1.8 கி.மீ விழுந்த சிங்கப்பூர் விமானம்.! பரபரப்பு வீடியோ காட்சிகள்…

Published by
மணிகண்டன்

சென்னை: இந்திய பெருங்கடலுக்கு மேலே பறந்து கொண்டிருந்த சிங்கப்பூர் விமானம் திடீரென 1.8 கிமீ  தூரத்திற்கு கிழே பறந்தது.

கடந்த மே 20ஆம் தேதி லண்டன் ஹீத்ரோவில் இருந்து சிங்கப்பூருக்கு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் SQ32 போயிங் 777 300ER புறப்பட்டது. அப்போது (மே 21) இந்திய பெருங்கடல் பகுதியில் ஜரவாதி படுகையில் 37,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருக்கையில் திடீரென 3 நிமிடத்தில் 1800மீட்டர் (1.8 கி.மீ) தூரம் கீழே சரிந்துள்ளது.

இந்த திடீர் சரிவில், விமானத்தில் பயணித்த பலருக்கும் காயம் ஏற்பட்டது. இந்த விமானத்தில் மொத்தம் 211 பயணிகள். 18 ஊழியர்கள் பயணித்துள்ளனர். இதில் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த 74 வயது முதியவர் ஒருவர் விமானம் கிழே சரிந்த அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார் என தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விமானத்தில் 3 இந்தியர்கள் பயணித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விமானம் எதிர்பார விதமாக கிழே சரிந்ததில் 25க்கும் மேற்பட்டவர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. விமானத்தின் நிலை அறிந்த விமானி உடனடியாக சுதாரித்துக்கொண்டு, பாங்காக் விமானத்தில் தரையிறக்கினார். அங்கு காயமடைந்தவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வானில் பறந்து கொண்டிருக்கும் வேளையில் எடுக்கப்பட்ட பரபரப்பான காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

விமானத்தில் பயணித்தவர்களில், ஆஸ்திரேலியாவிலிருந்து 56 பேரும், கனடாவிலிருந்து 2 பேரும், ஜெர்மனியிலிருந்து  1 பேரும், இந்தியாவிலிருந்து 3 பேரும், இந்தோனேசியாவிலிருந்து 2 பேரும், ஐஸ்லாந்திலிருந்து 1 பேரும், அயர்லாந்திலிருந்து 4 பேரும், இஸ்ரேலிலிருந்து 1 பேரும், மலேசியாவிலிருந்து 16 பேரும், மியான்மரில் இருந்து 2 பேரும், நியூசிலாந்தில் இருந்து 23 பேரும், பிலிப்பைன்ஸில் இருந்து 5 பேரும், சிங்கப்பூரில் இருந்து 41 பேரும், தென் கொரியாவில் இருந்து 1 நபரும், ஸ்பெயினில் இருந்து 2 பேரும், இங்கிலாந்தில் இருந்து 47 பேரும், அமெரிக்காவிலிருந்து 4 பேரும் பயணித்துள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

”விஜயால் நல்லது நடந்தால் சந்தோஷம்” – ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண்.!

திருச்செந்தூர் : ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், தமிழ்நாட்டில் சனாதன தர்ம யாத்திரையை தொடங்கியுள்ளார். அதன்படி, தமிழகத்தில் நான்கு…

55 minutes ago

மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி – உள்துறை அமைச்சகம் உத்தரவு.!

டெல்லி : மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அம்மாநில முதல்வர் பிரேன் சிங் ராஜிநாமா செய்து 5…

1 hour ago

தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம்… பல மாவட்ட பொறுப்பாளர்களை நியமித்து திமுக அறிவிப்பு.!

சென்னை : தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பால்வளத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் வசம் உள்ள காதி, கிராம…

2 hours ago

விதிகளை மீறிய பாகிஸ்தான் வீரர்கள்… அதிரடியாக அபராதம் விதித்த ஐ.சி.சி.!

பாகிஸ்தான் : கராச்சியில் நடைபெற்ற நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா இடையேயான முத்தரப்பு கிரிக்கெட் தொடரின்போது, ஐசிசி நடத்தை விதிகளின் நிலை…

4 hours ago

மனதை வருடும் ரெட்ரோவின் “கண்ணாடி பூவே” பாடல் வெளியீடு.!

சென்னை : இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்கும் 'ரெட்ரோ' திரைப்படத்தின் முதல் பாடலான…

4 hours ago

தியேட்டர்களில் வெறிச்சோடி…ஓடிடிக்கு வரும் விடாமுயற்சி! எப்போது தெரியுமா?

சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான விடாமுயற்சி படம் உலகம் முழுவதும் 300 கோடிகள்…

5 hours ago