சிங்கப்பூரில் 10 இந்தியர்கள் மீது அதிரடியாக வழக்குப்பதிவு செய்த சிங்கப்பூர் அரசு
முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸானது, தொடர்ந்து 200-க்கும் மேற்பட்ட நாடுகளை தாக்கி வருகிறது. இதுவரை இந்த வைரஸால், உலக அளவில், 5,306,235 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 340,047 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், அனைத்து நாடுகளிலேயும் இந்த வைரஸ் பரவாமல் இருக்க கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், சிங்கப்பூரில், மற்ற வீடுகளுக்கு சென்று பிறரை சந்திக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு தடையை மீறுபவர்களுக்கு, 6 மாதம் வரை ஜெயில் தண்டனை மற்றும் சிங்கப்பூர் டாலர் 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சிங்கப்பூரில் ஒரு வாடகை வீட்டில் குடியிருக்கும் ஒரு பெண், 2 ஆண்கள் கொண்ட இந்திய குடும்பத்தினர், தங்கள் வீட்டுக்கு ஒரு பெண், 6 ஆண்கள் என 7 இந்தியர்களை வரவழைத்து, அவர்களுடன் சேர்ந்து பேசி தேநீர் குடிப்பதும், படிப்பதுமாக மகிழ்ச்சியாக இருந்துள்ளனர்.
இதனை கண்டுபிடித்த சிங்கப்பூர் போலீசார், 10 பேர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், தாங்கள் புதியவர்கள் என்பதால், தங்களுக்கு விதிமுறைகள் தெரியாது என தெரிவித்துள்ளனர்.
பாங்காக் : அடுத்தடுத்த சக்தி வாய்ந்த நிலநடுக்கங்களால் (7.7, 6.4) மியான்மர் மக்கள் மிரண்டு போயுள்ளனர். இடிபாடுகளில் சிக்கி இதுவரை…
ஹைதராபாத் : லக்னோ அணி பலம் வாய்ந்த அணியான ஹைதராபாத் அணியை நேற்று வீழ்த்திய நிலையில் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட்…
டெல்லி : தாய்லாந்து, மியான்மரில் சக்தி வாய்ந்த லநடுக்கம் ஏற்பட்டுள்ளது, இது ரிக்டர் அளவில் 7.7 ஆகப் பதிவானதாக தகவல்…
பாங்காக் : மியான்மரை தொடர்ந்து தாய்லாந்திலும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மியான்மரில் இன்று காலை 11:50 மணியளவில் முதல் சக்தி…
சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில்…
சென்னை : இன்று (மார்ச் 28) தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த…