கொரோனா அதிகம் உள்ள நாடுகளில் இருந்து வரும் தொழிலாளர்களுக்கு சிங்கப்பூரில் அனுமதி மறுப்பு!

Published by
Rebekal

இந்தியா உட்பட கொரோனா அதிகம் உள்ள நாடுகளில் இருந்து வரக்கூடிய தொழிலாளர்களுக்கு சிங்கப்பூரில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து கொண்டேதான் செல்கிறது. இந்த கொரோனாவின் தாக்குதலுக்கு எந்தவொரு நாடுமே தப்பிக்கவில்லை என்றுதான் கூறியாக வேண்டும். இந்நிலையில் சில கொரோனா பாதிப்பு குறைவான நாடுகள் அதிக பாதிப்பு கொண்ட நாடுளில் உள்ள மக்களை தங்கள் நாட்டுக்குள் விடுவதற்கும் அஞ்சுகின்றனர். அது போல சிங்கப்பூரிலும் தங்கள் நாட்டுக்குள் வருவதற்கான மற்ற நாட்டை சேர்ந்த தொழிலாளர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி சிங்கப்பூருக்குள் வருவதற்கு தற்போது வரை அனுமதி பெற்றவர்களும் வருவதற்கு சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் மனிதவள அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுமானம் மற்றும் கப்பல் தொழில் செய்பவர்கள் ஒப்புதல் பெற்றபடி அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதிக கொரோனா தொற்று கொண்ட நாடுகளில் உள்ள மக்கள் சிங்கப்பூருக்குள் வருவதற்கு அனுமதி பெற்றிருந்தாலும், தற்பொழுது உள்ள நிலைப்படி அனுமதி மறுக்கப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. நிலைமை சீராகி பின்னர் மீண்டும் எப்பொழுது சிங்கப்பூருக்கு நுழைவதற்கு விண்ணப்பிக்கலாம் என்பது குறித்து தாங்கள் அறிவிப்போம் எனவும் தெரிவித்துள்ளனர்.

ஆனால் ஆஸ்திரேலியா, சீனா, நியூஸிலாந்து, தைவான், ஹாங்காங் மற்றும் மக்காவ் ஆகிய நாடுகளில் இருந்து சிங்கப்பூருக்கு வரக்கூடிய பயணிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மற்ற நாடுகளில் இருந்து வரக்கூடிய தொழிலாளர்களுக்கு எல்லாம் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று இரவு 11.59 மணியுடன் சிங்கப்பூரில் நுழைவதற்கு அனுமதி பெற்ற நாடுகளைத் தவிர மற்ற நாடுகளில் இருந்து வரக்கூடிய அனைவருக்கும் அனுமதி மறுக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Published by
Rebekal

Recent Posts

அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து சரிந்த பெங்களூர்.., பஞ்சாப் அணிக்கு இது தான் இலக்கு.!

அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து சரிந்த பெங்களூர்.., பஞ்சாப் அணிக்கு இது தான் இலக்கு.!

பெங்களூர் : பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் இன்றைய ஐபிஎல் போட்டி, மழை காரணமாக 14 ஓவர் போட்டியாக…

7 hours ago

”அடிதடி, ரத்தம் எதுவும் என்ன விட்டு போகல”…, கவனம் ஈர்க்கும் ‘ரெட்ரோ’ டிரைலர்.!

சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…

11 hours ago

RCB vs PBKS : குறுக்கே வந்த கௌசிக்.., மழை காரணமாக டாஸ் தாமதம்.!

பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…

11 hours ago

என்னது..!! செல்பாேன் கட்டணம் மீண்டும் உயர்வா.? ஜியோ, ஏர்டெல் பயனர்களுக்கு அதிர்ச்சி.!

டெல்லி : செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில்,…

11 hours ago

”வென்றால் மாலை.., இல்லை என்றால் பாடை” – சீமானின் பரபரப்பு பேச்சு.!

சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…

12 hours ago

க்ரீன் சிக்னல் கொடுத்த அர்ஜுன்.., 13 வருட வெளிநாட்டு காதலனை மணக்க போகும் அஞ்சனா.!

சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…

13 hours ago