இந்தியில் மெகா ஹிட்டான அந்தாதூன் திரைப்படம் தமிழில் ரீமேக் ஆவதை தொடர்ந்து அதில் தபு நடித்த கதாபாத்திரத்தில் சிம்ரன் நடிக்கவுள்ளார்.
கடந்த 2018-ம் ஆண்டு இந்தியில் ஆயுஷ்மான் குரானா ,தபு , ராதிகா ஆப்தே உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி வசூலில் சாதனை படைத்த திரைப்படம் “அந்தாதூன்”. ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் சுமார் 40 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்த படம் ரூ.450 கோடி வரை வசூல் செய்தது .
மூன்று தேசிய விருதுகளை வென்ற இந்த படம் தமிழில் ரீமேக் செய்யப்பட உள்ளது.சமீபத்தில் ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் படத்தினை இயக்கி வரவேற்பை பெற்ற ஜே.ஜே.ஃப்ரெட்ரிக் அந்தாதூன் தமிழ் ரீமேக்கை இயக்கவுள்ளார்.ஆயுஷ்மான் குரானா நடித்த கதாபாத்திரத்தில் நடிகர் பிரஷாந்த் அவர்களும் ,தபு கதாபாத்திரத்தில் சிம்பு அவர்களும் நடிக்கவுள்ளனர் .கொரோனா ஊரடங்கு காரணமாக தள்ளி வைக்கப்பட்டிருந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நடிகை சிம்ரன் இந்த படத்தில் நடிக்கவிருப்பது தொடர்பாக டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழுக்கு அளித்த பேட்டியில்,இந்திய சினிமாவின் மைல்கல் தான் அந்தாதூன் திரைப்படம் .இதில் தபு கதாபாத்திரத்தில் நான் நடிப்பது என்பது மிகப் பெரிய பொறுப்பு.அந்த கேரக்டர் படம் முழுவதும் மிகவும் தைரியமான மற்றும் சவாலான கேரக்டராக இருக்கும் என்று கூறி சிம்ரன் மீண்டும் பிரஷாந்துடன் இணைந்து நடிப்பதில் மகிழ்ச்சியாக உள்ளதாகவும் ,ஜே.ஜே.ப்ரெட்டிரிக்குடன் இணைந்து பணியாற்ற ஆவலாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…