சளி மற்றும் இருமலை விரட்டும் எளிய நாட்டுமருந்து.!

Default Image
ஜலதோஷம், இருமல் சாதாரணமாக வந்து, நம்மை மிக அதிகமாக பாதிக்கும். அதனால் உண்டாகும் சிரமங்களும் பல. மருந்து சாப்பிட்டாலும் சாப்பிடாவிட்டாலும், உடலில் இயற்கையாகவே உள்ள நோய் எதிர்ப்பு தன்மை காரணமாக, ஒரு  வாரத்தில் சரியாகிவிடும்தான்.
ஜலதோஷத்தை போக்க மிக எளிமையான தீர்வு உண்டு. மூலிகை மருந்துக்கடைகளில், திரிகடுகம் என்று ஒரு முக்கூட்டு மருந்து கிடைக்கும், அதை  வாங்கிக்கொள்ளுங்கள், சுக்கு, மிளகு மற்றும் திப்பிலி எனும் அருமருந்துகள் சரியான விகிதத்தில் கலந்த கலவை அது. மிக நல்ல சித்த மருந்தாகும்.
உடலின் அனைத்து பிரச்னைகளையும் சரிசெய்யும் அருமருந்தாக விளங்கும், இதன் பலன்கள் ஏராளம். இதனை தேநீர் தயாரித்து ஜலதோஷத்தை எவ்வாறு போக்குவது என்பதை பார்ப்போம்.
தேநீர் செய்ய:
 சுக்கு (1 டீஸ்பூன்), மிளகு (5 ) மற்றும் திப்பிலி (3) மற்றும் வெற்றிலை (1) அளவு எடுத்து, ஒரு பாத்திரத்தில், மூன்று டம்ளர் தண்ணீர் ஊற்றி, நன்கு கொதித்து  மூன்று டம்ளர் என்ற அளவிலிருந்து, ஒரு டம்ளர் என்ற அளவுக்கு வரும்வரை, சுண்டக் காய்ச்ச வேண்டும். அதன்பின் அந்த நீரை ஒரு பாத்திரத்தில் எடுத்து,  சற்று சூடு தணிந்த பிறகு, சிறுகச் சிறுக பருகி வரவேண்டும்.
சித்த வைத்தியத்தில், சுண்டக் காய்ச்சி பருகுவது என்பது மிக சக்தி வாய்ந்த ஒரு நோய் தீர்க்கும் முறையாகும், அதன் அடிப்படையில், நாம் பருகி வரும் இந்த  தேநீர் ஜலதோசத்தை போக்கும், இருமலைப்போக்கும். ஒரு நாளில் இரண்டு அல்லது மூன்று முறை பருகினாலே, ஜலதோசம் நீங்கி, உடல் நிலை சரியாகிவிடும்.
மேலும் தகவலுக்கு இணைந்திடுங்கள் தினச்சுவடு.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்