சிம்பு அடுத்ததாக சுரேஷ் காமாட்சி தயாரித்து இயக்கவிருக்கும் படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
நடிகர் சிம்பு நடிப்பில் பொங்கல் தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ஈஸ்வரன்.இந்த திரைப்படம்குடும்ப ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.அதனை தொடர்ந்து சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு எனும் படத்தில் நடித்து வருகிறார்.இதன் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
அதன் பின் மப்டி பட ரீமேக்கான பத்து தல படத்தில் சிம்பு நடிக்கவுள்ளார்.அதனை தொடர்ந்து கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகும் படத்திலும் நடிக்கவுள்ளார்.இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் சிம்பு அடுத்ததாக மாநாடு பட தயாரிப்பாளரான சுரேஷ் காமாட்சி இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுரேஷ் காமாட்சி ஏற்கனவே ‘மிக மிக அவசரம் ‘ எனும் படத்தை இயக்கியது குறிப்பிடத்தக்கது . தற்போது இவர் இரண்டாவதாக இயக்கும் படமானது பிரபல எழுத்தாளர் ம.காமுத்துரை எழுதிய ‘முற்றாத இரவொன்றில்’ என்கிற நாவலைத் தழுவி உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது.அதற்கான உரிமையை சுரேஷ் காமாட்சி காமுத்துரை அவர்களிடமிருந்து பெற்று கொண்டதாகவும் கூறப்படுகிறது.சுரேஷ் காமாட்சி அடுத்ததாக தயாரித்து இயக்கவிருக்கும் படத்தில் சிம்பு நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.விரைவில் இதனை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…