சிம்புவிற்கு டும்டும்டும்.! பெண் எந்த ஊர் தெரியுமா.?

Default Image

சிம்பு லண்டனை சேர்ந்த கோடீஸ்வர வீட்டு பெண்ணை திருமணம் செய்து கொள்ள போவதாகவும், கொரோனா பிரச்சினை முடிவுக்கு வந்ததும் திருமணம் நடைபெறும் என்றும் செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளன

தமிழ் சினிமாவில் பல சர்ச்சைகளுக்கு உள்ளனாலும் பிரபல முன்னணி நடிகராக திகழ்பவர் தான் சிம்பு . அவருக்கென்றே ரசிகர்கள் கூட்டம் அதிகமாகவே உள்ளது என்று கூறலாம். இவர் தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடித்து கொண்டிருக்கும் திரைப்படம் மாநாடு.இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்கி சுரேஷ் காமாட்சி தயாரித்து இருக்கிறார். இதனையடுத்து, இந்த படத்தின் படப்பிடிப்பு பல சர்ச்சைக்கு பின்னர் 2 மாதங்களுக்கு முன்பு தான் தொடங்கப்பட்டது . தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக சிங்கப்பூரில் நடந்து வந்த படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டது.

சமீபத்தில் இவர் விரைவில் திருமணம் செய்ய போவதாக சில தகவல்கள் கசிந்துள்ளது. சிம்பு தாய் உஷா, அவரது நெருங்கிய சொந்தக்கார பெண் ஒருவரை மகனுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது. அதனை உறுதிப்படுத்தும் வகையில் சிம்புவின் நெருங்கிய நண்பரான விடிவி கணேஷ் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் விரைவில் சிம்புவிற்கு திருமணம் இருக்கும் என்றும், அதனை குறித்த அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறியிருந்தார் .இந்நிலையில் தற்போது இவர் திருமணம் செய்யவிருக்கும் பெண் லண்டனை சேர்ந்தவர் என்றும், ஒரு கோடீஸ்வர குடும்பத்தை சேர்ந்தவர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் பெண்ணின் குடும்பத்திற்கு லண்டனில் சொந்தமாக கல்லூரிகள் வைத்து நடத்தி வருவதாகவும், சிம்புவின் குடும்பத்திற்கு தூரத்து சொந்தம் என்றும், கொரோனா பிரச்சினை முடிவுக்கு வந்தது திருமணம் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. ஆனால் தற்போது வரை இதனை குறித்து சிம்பு வாயே திறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்