விக்ரம் நடித்துள்ள கோப்ரா படம் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் சிம்புவின் மாநாடு படமும் அதே தினத்தில் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், எந்த படம் வெற்றி பெற்று அதிக வசூல் பெரும் என ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இயக்குனர் அஜய் ஞானமுத்து அவர்களின் இயக்கத்தில் நடிகர் சியான் விக்ரம் நடித்துள்ள புதிய தமிழ் திரைப்படம் தான் கோப்ரா. இந்தப் படத்துக்கு ஏ ஆர் ரஹ்மான் இசை அமைத்துள்ள நிலையில், படம் வெளியீடு தேதி ஏப்ரல் 14 என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்காக விக்ரமின் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்து வரக்கூடிய மாநாடு திரைப்படத்திற்கான படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிகை கல்யாணி பிரியதர்ஷன் அவர்கள் நடித்துள்ளார்.
மேலும் இந்த படத்தில் பிரேம்ஜி, மனோஜ், பாரதிராஜா, எஸ் ஜே சூர்யா, எஸ் ஏ சந்திரசேகர் ஆகிய பல பிரபலங்களும் இணைந்து நடிக்கின்றனர். இந்த படத்திற்கான மோஷன் போஸ்டர் பொங்கலை முன்னிட்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி இந்த மாநாடு திரைப்படம் வருகிற ஏப்ரல் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கோப்ரா ஏப்ரல் 14 வெளியாகும் என கூறப்பட்டுள்ளது. இரண்டு நடிகர்களின் ரசிகர்களும் மிகுந்த ஆர்வத்துடன் உள்ள நிலையில், எந்த படம் வசூல் அதிகமாக பெற்று, விமர்சனரீதியாக வரவேற்பை பெறப் போகிறது என்பது தெரியவில்லை. பொறுத்திருந்து பார்க்கலாம்.
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் மோதலுக்கு மத்தியில், இந்திய பெண் விமானி சிவாங்கி சிங் பாகிஸ்தானில் பிடிபட்டதாக கூறப்படும்…
சென்னை : பஹல்காம் தாக்குதல் , ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு…
காஷ்மீர் : இந்தியாவின் எல்லை பகுதியில் நான்காவது நாளாக இன்று இந்தியா - பாகிஸ்தான் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.…
டெல்லி : பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் உறவுகளில் பெரும் விரிசல் ஏற்பட்டது. அது தற்போது இரு…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்க…