சித்து மூஸ்வாலா கொலை வழக்கு: உத்தரகாண்டில் 6 பேர் கைது.!

Default Image

பஞ்சாப்பின் பிரபல பாப் பாடகரான சித்து மூஸ்வாலா நேற்று பஞ்சாபின் மன்சா என்ற கிராமத்தில் அடையாளம் தெரியாத கும்பல்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதில் அவரின் இரண்டு நண்பர்கள் காயமடைந்தனர். சித்து மூஸ்வாலா தனது இரண்டு நண்பர்களுடன் தனது கிராமத்திற்கு செல்லும் வழியில் இந்த கொலை நிகழ்ந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், இந்த  கொலை வழக்கில் சந்தேகத்தின் பெயரில்  நபர் ஒருவர் உத்தரகாண்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சந்தேகத்தின் பெரியரில் காவல்துறையின் கூட்டுக் குழு அவரைத் தடுத்து நிறுத்தியபோது, ஹேம்குந்த் சாஹிப் யாத்திரையின் ஒரு பகுதியான மலைப்பகுதியில் உள்ள யாத்ரீகர்களிடையே அந்த நபர் மறைந்திருந்தார்.

அவரை காவல்துறையினர் கண்டுபிடித்து கைது செய்தனர். அந்த நபர் இப்போது பஞ்சாபிற்கு அழைத்துச் செல்லப்படுகிறார். இவரை தவிர்த்து  உத்தரகாண்ட் மாநிலத்தில் இருந்து மேலும் 5 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  அனைவரும் பஞ்சாப் மாநிலத்துக்கு அழைத்துச் செல்லப்படுவதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்