உங்கள் வீட்டில் கொத்தமல்லி 1 வாரம் அழுகாம இருக்கணுமா?

Default Image
உங்கள் வீட்டில் கொத்தமல்லியை ஒரு வாரத்திற்கும் மேலாக வாடி போகாமல் வைத்துக் கொள்ள என்ன செய்யலாம் வாருங்கள் பார்க்கலாம்.

காய்கறி வாங்கும் போது இறுதியில் கேட்டு வாங்க கூடிய இரு பொருள் கறிவேப்பிலை கொத்தமல்லியை வேண்டாம் என்று யாரும் கூறுவதில்லை. ஆனால், ஒருமுறை வாங்கிய கொத்தமல்லி நீண்ட நாட்கள் புதிதாக இருப்பதில்லை. அடுத்த சில நாட்களில் வாடியும் அழுகியும் போகிறது, அதற்கு என்ன செய்யலாம் என பார்ப்போம் வாருங்கள்.

மஞ்சள் தண்ணீர் பயன்படுத்தலாம்:

ஒரு கொத்தமல்லி கட்டு வாங்கி அதன் வேர்ப்பகுதியை முதலில் வெட்டவும் அதன் பிறகு ஒரு பாத்திரம் எடுத்து அதில் தண்ணீர் நிரப்பி ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து அந்த மஞ்சள் நீரில் கொத்தமல்லி கட்டை அரை மணி நேரம் ஊறவையுங்கள்.

பிறகு நன்றாக கழுவி அதனை உலர விட்டு எடுக்கவும். அடுத்ததாக உலர்ந்த கொத்தமல்லியை ஒரு சிறு துளி கூட ஈரம் இல்லாமல் பார்த்துக் கொள்வது மிகவும் அவசியம். ஒரு காற்றுப்புகாத டப்பாவை எடுத்து உங்கள் ஃப்ரிட்ஜில் வைத்துக் கொள்ளுங்கள். அடுத்த இரண்டு முதல் மூன்று வாரங்கள் இந்த இலைகள் வாடாமல் புதிதாக இருக்க உதவும்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live TODAY
Srivanigundam - School Student
Dharmendra Pradhan
next icc tournament
gold price
Ilaiyaraaja Symphony
virat kohli about aus