ஆப்கானிஸ்தானில் துப்பாக்கி சூடு – 5 அரசு ஊழியர்கள் மற்றும் 4 போலீசார் கொலை!

Default Image

ஆப்கானிஸ்தானில் துப்பாக்கி ஏந்திய 4 தலிபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 அரசு ஊழியர்கள் மற்றும் 4 போலீசார் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் துப்பாக்கி ஏந்திய சிலர் திடீரென்று நடத்திய துப்பாக்கி சூட்டில் கிராமப்புற பாதுகாப்புக்காக நிறுத்திவைக்கப்பட்டிருந்த 4 போலீசார் கொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஐந்து அரசு ஊழியர்களும் இந்த துப்பாக்கி சூட்டில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திடீரென நடைபெற்ற இந்த தாக்குதலில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

இது குறித்து ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷராப் கானி அவர்கள்,  இந்த தாக்குதலை தான் வன்மையாக கண்டிப்பதாகவும், சமாதான பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில் தலிபான்கள் நடத்திய இந்த வன்முறை மீண்டும் பிரச்சனை அதிகரித்துள்ளது எனவும் கூறியுள்ளார். மேலும் அவர்கள் சமாதான பேச்சுவார்த்தையை நம்பவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
Match abandoned due to rain
Wasim Akram
GK Mani home wedding ceremony - Jason sanjay - Vijay sethupathi - Tamilnadu CM MK Stalin
tvk vijay ntk seeman
today rain news
shaam sivakarthikeyan