இத்தாலியின் பிரிண்டிசி(Brindisi) நகரில் உள்ள திரையரங்கத்தை சீரமைக்கும் பணி சமீபத்தில் நடைபெற்றது. அப்போது சக்திவாய்ந்த வெடிகுண்டு தென்பட்டது. இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில் 1941-ம் ஆண்டு அந்த வெடிகுண்டை பிரிட்டிஷ் படையினர் வீசியிருக்கலாம் என கருதப்படுகிறது. செயலிழக்கப்படாத அந்த வெடிகுண்டு ஒரு மீட்டர் நீளமும், 40 கிலோ டைனமைட் வெடிபொருட்களுடனும் இருந்தது. பெரும் அச்சுறுத்தலாக இருந்த வெடிகுண்டை செயலிழக்க நிபுணர்கள் முடிவு செய்தனர்.
இந்நிலையில், வெடிகுண்டு கண்டறியப்பட்ட இடத்திலிருந்து சுமார் 1,500 மீட்டர் பரப்பளவுக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளும் மூடப்பட்டன. பின்னர் 54,000 பேர் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடத்துக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். பிரிண்டிசி விமான நிலையம், ரயில் நிலையம், 2 மருத்துவமனைகளும் மூடப்பட்டன. பிரிண்டிசி சிறையில் இருந்த 200 கைதிகள், அருகே உள்ள லீசி சிறைக்கு மாற்றப்பட்டனர்.
இதனையடுத்து முன்னெச்சரிக்கை பணிகள் முடிவடைந்த நிலையில், சுமார் 40 நிமிடங்களுக்கு பின் வெடிகுண்டு செயலிழக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். உலகப்போர் காலத்தில் வீசப்பட்டு செயலிழக்காமல் இருக்கும் வெடிகுண்டுகள், இத்தாலிக்கு பெரும் ஆபத்தாக இருந்து வருகிறது. கடந்த 1-ம் தேதி துரின் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட வெடிகுண்டை செயலிழக்க செய்யும் பணிக்காக 10,000 பேர் வெளியேற்றப்பட்டனர். தற்போது, உரிய நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டு மற்றொரு வெடிகுண்டு செயலிழக்கப்பட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.
சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…
பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…
டெல்லி : செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில்,…
சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…
சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…
சென்னை : தென்னாப்பிரிக்காவின் இளம் அதிரடி வீரரான டிவால்ட் பிரேவிஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்துள்ளார். சென்னை சூப்பர்…