அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள துணிக்கடையில், 14 வயது சிறுமியை தவறுதலாக சுட்டுக் கொன்ற போலீசார்.
அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள துணிக்கடை ஒன்றில் மர்ம நபர் ஒருவர் ஆயுதங்களுடன் நுழைந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து அங்கு சென்ற போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட நிலையில், மர்ம நபரால் பெண் ஊழியர்கள் தாக்கப்பட்டு, கீழே ரத்த காயங்களுடன் கிடந்துள்ளனர்.
இதைக்கண்ட போலீசார் குற்றவாளியை பிடிக்க துப்பாக்கியால் சுட்டுள்ளனர். அப்போது சுவரை துளைத்து கொண்டு சென்ற குண்டு, உடைமாற்றும் அறையில் இருந்த 14 வயது சிறுமி மீது பாய்ந்துள்ளது. இந்த சம்பவத்தில் அந்த சிறுமி தனது தாயின் கண் முன்னே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தனது 15-வது பிறந்த நாளுக்காக புத்தாடை வாங்குவதற்காக கடைக்கு சென்ற சிறுமிக்கு இந்த நிலைமை நேர்ந்துள்ளது. இது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…
சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…
ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…
ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்படும் நெய்யில், மீன் எண்ணெய்,…