அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள துணிக்கடையில், 14 வயது சிறுமியை தவறுதலாக சுட்டுக் கொன்ற போலீசார்.
அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள துணிக்கடை ஒன்றில் மர்ம நபர் ஒருவர் ஆயுதங்களுடன் நுழைந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து அங்கு சென்ற போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட நிலையில், மர்ம நபரால் பெண் ஊழியர்கள் தாக்கப்பட்டு, கீழே ரத்த காயங்களுடன் கிடந்துள்ளனர்.
இதைக்கண்ட போலீசார் குற்றவாளியை பிடிக்க துப்பாக்கியால் சுட்டுள்ளனர். அப்போது சுவரை துளைத்து கொண்டு சென்ற குண்டு, உடைமாற்றும் அறையில் இருந்த 14 வயது சிறுமி மீது பாய்ந்துள்ளது. இந்த சம்பவத்தில் அந்த சிறுமி தனது தாயின் கண் முன்னே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தனது 15-வது பிறந்த நாளுக்காக புத்தாடை வாங்குவதற்காக கடைக்கு சென்ற சிறுமிக்கு இந்த நிலைமை நேர்ந்துள்ளது. இது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை : பச்சை முட்டை மற்றும் எண்ணெய் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு உருவாக்கப்படுவது மயோனைஸ். இதனை மக்கள் சிக்கன் சாப்பிடுவதில் இருந்து…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் பிரபல சுற்றுலாத் தலமான பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம்…
ஹைதராபாத் : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், ஹைதராபாத் அணியும் மோதியது. வழக்கமாக இந்த சீஸனில் இதுவரை…
பஹல்காம் : தீவிரவாதத் தாக்குதலையடுத்து, ஏப்ரல் 23 அன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாதுகாப்பு குறித்து அமைச்சரவைக் குழு…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் ஹைதராபாத் கிரிக்கெட் மைதானத்தில் இன்று…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் (ஏப்ரல் 23) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணி மும்பை இந்தியன்ஸ் (MI) அணிக்கு…