பிரான்ஸ் நாட்டில் புதிதாக உருமாறிய கொரோனா பரவியுள்ளது கண்டுபிடிப்பு.
உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திய கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில், புதிதாக உருமாறிய ஓமைக்ரான் வகை கொரோனா தொற்று புதிதாக கண்டுபிடிக்கப்பட்டு, தற்போது பல்வேறு நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமான நிலையங்கள், இரவுநேர ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பிரான்ஸ் நாட்டில் புதிதாக உருமாறிய கொரோனா பரவியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் ஆய்வாளர்கள் கண்டுபிடுத்துள்ள உருமாறிய கொரோனாவுக்கு IHUB.1.640.2 என பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஆப்ரிக்கா நாடான கேமரூனில் இருந்து மார்சேயில்ஸ் நகருக்கு வந்த 12 பேருக்கு இதுவரை புதிய வகை கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் ஒமைக்ரான் வேகமாக பரவி வரும் நிலையில், மீண்டும் மக்களுக்கு அதிர்ச்சியூட்டும் விதமாக பிரான்ஸ் நாட்டில் புதிதாக உருமாறிய கொரோனா பரவியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மருத்துவ வல்லுநர்களால் IHUB.1.640.2 என்று பெயர் சூட்டப்பட்ட உருமாறிய கொரோனா 46 பேருக்கு பரவும் தன்மை கொண்டதாக கூறப்படுகிறது.
ஆனால், பிரான்சில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த புதிய வகை கொரோனா பிற நாடுகளில் இந்த வகை கொரோனா இன்னும் கண்டறியப்படவில்லை. இந்த புதிய வகை கொரோனா குறித்து உலக சுகாதார அமைப்பும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த வருடம் ஜூன் மாதம் ஸ்டார்…
சென்னை : பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த…
டெல்லி : அண்மையில் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றிய கொண்டாட்டத்தில் இந்திய அணி வீரர்கள் இருக்கும்…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை நேற்று…
சென்னை : தேசிய கல்வி கொள்கையை ஆதரிக்கும் வகையில் உள்ள PM Shri திட்டத்தில் தமிழகத்தை இணைக்க மத்திய அரசு…
சென்னை : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளதாக திமுக தொடர்ந்து கூறிவருகிறது. இந்த தொகுதி…