ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில் சூர்யா – ஹரி காம்போவில் உருவாகும் அருவா எனும் புதிய படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாகும் கதாநாயகி நடிகை ராசிக்கன்னா தானாம்.
தமிழ் திரையுலகில் நடிகர் சூர்யாவை வைத்து வேல், ஆறு மற்றும் சிங்கம் ஆகிய படங்களை எடுத்து புகழ் பெற்ற இயக்குனர் தான் ஹரி. இவர்கள் இருவரும் இணைந்து எடுக்க கூடிய படங்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.
இந்நிலையில், தற்போது மீண்டும் இருவரும் இணைந்து புதிய படம் ஒன்றை உருவாக்க உள்ளனர். ஹரி இயக்கத்திலும், ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பிலும், சூர்யாவின் நடிப்பிலும் உருவாக்கவுள்ள புதிய திரைப்படம் தான் அருவா.
இந்த படத்தில் இசையமைப்பாளர் இமான் இசையமைக்கிறார். சூர்யா படத்திற்கு இமான் இசையமைப்பது இதுவே முதன் முறை. இந்நிலையில், படத்தில் சூர்யாவுக்கான ஜோடி நாயகி குறித்து கதாநாயகிகளிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வந்தது.
அதனை தொடர்ந்து தற்பொழுது நடிகை ராசிகன்னாவை நடிக்க வைக்கலாம் என படக்குழுவினர் எடுத்த முடிவின் பேரில், தற்பொழுது அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகியுள்ளது.
இது குறித்து நடிகை ராசிகன்னாவும் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தான் அரண்மனை 3 மற்றும் ஹரி இயக்கத்தில் உருவாகும் சூர்யாவின் தமிழ் படம் ஒன்றிலும் நடிக்கவுள்ளதாக கூறியுள்ளார். இன்னும் இரண்டு தெலுங்கு படங்கள் பேச்சு வார்த்தையில் உள்ளதாகவும், லாக் டவுன் முடிந்ததும் படப்பிடிப்பு துவங்கும் எனவும் கூறியுள்ளார். இதோ அந்த பதிவு,
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…
சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…