ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில் சூர்யா – ஹரி காம்போவில் உருவாகும் அருவா எனும் புதிய படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாகும் கதாநாயகி நடிகை ராசிக்கன்னா தானாம்.
தமிழ் திரையுலகில் நடிகர் சூர்யாவை வைத்து வேல், ஆறு மற்றும் சிங்கம் ஆகிய படங்களை எடுத்து புகழ் பெற்ற இயக்குனர் தான் ஹரி. இவர்கள் இருவரும் இணைந்து எடுக்க கூடிய படங்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.
இந்நிலையில், தற்போது மீண்டும் இருவரும் இணைந்து புதிய படம் ஒன்றை உருவாக்க உள்ளனர். ஹரி இயக்கத்திலும், ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பிலும், சூர்யாவின் நடிப்பிலும் உருவாக்கவுள்ள புதிய திரைப்படம் தான் அருவா.
இந்த படத்தில் இசையமைப்பாளர் இமான் இசையமைக்கிறார். சூர்யா படத்திற்கு இமான் இசையமைப்பது இதுவே முதன் முறை. இந்நிலையில், படத்தில் சூர்யாவுக்கான ஜோடி நாயகி குறித்து கதாநாயகிகளிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வந்தது.
அதனை தொடர்ந்து தற்பொழுது நடிகை ராசிகன்னாவை நடிக்க வைக்கலாம் என படக்குழுவினர் எடுத்த முடிவின் பேரில், தற்பொழுது அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகியுள்ளது.
இது குறித்து நடிகை ராசிகன்னாவும் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தான் அரண்மனை 3 மற்றும் ஹரி இயக்கத்தில் உருவாகும் சூர்யாவின் தமிழ் படம் ஒன்றிலும் நடிக்கவுள்ளதாக கூறியுள்ளார். இன்னும் இரண்டு தெலுங்கு படங்கள் பேச்சு வார்த்தையில் உள்ளதாகவும், லாக் டவுன் முடிந்ததும் படப்பிடிப்பு துவங்கும் எனவும் கூறியுள்ளார். இதோ அந்த பதிவு,
ஆஸ்திரேலியா : சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. பாகிஸ்தான் நடத்தும் இந்த…
சென்னை : அத்திக்கடவு-அவிநாசி 17 ஆகஸ்ட் 2024 அன்று நிறைவேற்றுப்பட்டது. இந்தத் திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி…
சென்னை : காதலர் தினமான வருகின்ற பிப்ரவரி 14 அன்று தமிழ் சினிமாவில் இருந்து ஒத்த ஓட்டு முத்தையா, 2கே…
குஜராத் : இந்தியா - இங்கிலாந்து இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி, இன்று அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. இங்கிலாந்துக்கு எதிரான…
திருவண்ணாமலை : தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதன் உட்கட்டமைப்பை மறுசீரமைக்கும் வகையில்…
அகமதாபாத் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடர் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி…