ஒடும் காரில் துடிதுடிக்க பள்ளி மாணவி..வாயில் மதுவை ஊற்றி சக மாணவர்கள் வெறிச்செயல்.! அதிர்ச்சி சம்பவம்

Published by
kavitha
  • ஹரியானாவில் பள்ளி மாணவிக்கு மதுவை ஊற்றிக் கொடுத்து பாலியல் வன்கொடுமை
  • சக மாணவர்களின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தேசிய பெண் குழந்தைகள் தினம் அன்றே ஹரியானா மாநிலத்தில் ஓடும் காரில் பள்ளி மாணவியை ஒருவரை கடத்தி  பாலியல் வன்கொடுமை செய்த கொடூரச் சம்பவம் அரங்கேறி உள்ளது.

இந்த அதிர்ச்சி சம்பவம் ஆனது ஹரியானா மாநிலம் பானிபட் அருகே உள்ள மாதிரி நகரத்தில் உள்ள பிரதான பூங்கா பகுதியிலேயே கொடூர சம்பவம் அரங்கேறி உள்ளது. பாதிக்கப்பட்ட மாணவி  கடந்த வெள்ளிக்கிழமை அன்று மாலை 5 மணிக்கு தன் டியூஷன் வகுப்புக்கு செல்வதாகக் கூறி விட்டு தன் இரு சக்கர வாகனத்தில் சென்றவர்.அதன் பின் வீடு திரும்பவில்லை மேலும் நள்ளிரவு ஆகியும் மாணவி வீடு திரும்பாததால் அச்சமடைந்த பெற்றோர்  மாணவியை பல இடங்களில் தேடினர். ஆனால் எங்கே  தேடியும் மாணவி கிடைக்க வில்லை இவ்வாறு தேடி கொண்டிருக்கும் பொழுது டி.ஏ.வி. பூங்காவின் அருகே மாணவி மயக்க நிலையில் கிடந்துள்ளார் அடையாளம் காணப்பட்ட அவரை பெற்றோர்  தனியார் மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை பிரிவில் மாணவி அனுமதித்தனர்.

Related image

தன்னிலை அறியாமல் மயக்கத்தில் இருந்த அவர் மயக்கம் தெளிந்தவுடன் மாணவியிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.அதற்கு பதிலளித்த மாணவி கூறிய பதில்கள் அதிர்ச்சி அடைய வைத்தது.

பாதிக்கப்பட்ட மாணவி கூறுகையில் பிறந்த நாள் கொண்டாட்டம் நடைபெறுவதாக கூறி என்னுடைய நண்பர்கள் அருகே உள்ள பூங்கா பகுதிக்கு அழைத்துச் சென்றதாகவும்.தான் முதலில் வரமாட்டேன் என்று சொன்னேன் என்னை கட்டாயப்படுத்தி பூங்காவுக்கு அழைத்துச் சென்றவர்கள், அவர்கள் வைத்திருந்த மதுவை கட்டாயப்படுத்தி என்னை அருந்த செய்தனர். நான் மயகமடைந்து விட்டேன் என்று கூறினார்.

 

மேலும் இது கூறித்து போலீசார் கூறுகையில் இரவு நேரம் என்பதால்  மயக்கமடைந்த மாணவியை அந்த நபர்கள் தங்களது காரில் ஏற்றி ஓடுகின்ற காரில் வைத்தே பாலியல் வன்கொடுமை செய்து உள்ளனர். இதனையடுத்து மயக்கமடைந்த நிலையில் ரத்த காயங்களுடன் மாணவியை அந்த கும்பல் பூங்கா அருகே போட்டுவிட்டு சென்று உள்ளனர் என்று தெரிவித்தனர்.

இந்த கொடூர செயல் தொடர்பாக  ஆஷிஷ் மற்றும் விஷ்ணு ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து உள்ளனர். 4 பேர் இந்த குற்றச்சம்பவத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட  நிலையில் அவர்கள் மீது பல பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தலைமறைவாகி உள்ள மேலும் இருவரை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

ஹரியானாவில் மட்டும்  இதுபோன்ற பாலியல் வன்கொடுமை சம்பவங்கள்  நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி கடந்த 7 மாதத்தில் மட்டும் 99 புகார்கள் பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

“பாஜகவுடன் உடனடியாக கூட்டணி அமைக்க வேண்டும்!” மீண்டும் வலியுறுத்தும் சைதை துரைசாமி!

சென்னை : சென்னை முன்னாள் அதிமுக மேயர் சைதை துரைசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை தெரிவித்தார். …

15 minutes ago

அன்னா கிராம்லிங்க்கு செக்! கண்ணை மூடி கொண்டு வீழ்த்தி அசத்திய மேக்னஸ் கார்ல்சன்!

ஜெர்மனி : உலகப் புகழ் பெற்ற செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சன் ஜெர்மனியில் உள்ள வைஸ்ஸென்ஹாஸில் நடைபெறும் பிளைண்ட்ஃபோல்டு ஃப்ரீஸ்டைல்…

36 minutes ago

கொல்கத்தாவுக்கு பயத்தை காட்டிய பூரன்! லக்னோ வைத்த பெரிய இலக்கு!

கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி…

1 hour ago

ஒண்ணும் தெரியாம விஜய் பேச வேண்டாம்! பதிலடி கொடுத்த தமிழிசை சௌந்தரராஜன்!

சென்னை : கடந்த 10 மாதங்களாக வீட்டு உபயோக சமையல் சிலிண்டர் விலை உயர்த்தப்படாமல் இருந்த நிலையில் நேற்று (ஏப்ரல் 7)…

1 hour ago

பவர்பிளேக்கு முன்னாடி அவுட் ஆகுறீங்க… ரோஹித் ஷர்மாவுக்கு விமர்சித்து அட்வைஸ் கொடுத்த கவாஸ்கர்!

மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் ரோஹித் சர்மாவின் ஐபிஎல் பார்ம் இந்த ஆண்டு மிகவும் கவலைக்கிடமாக…

2 hours ago

டாஸ்மாக் விவகாரம் : வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்றக் கோரிய தமிழக அரசின் மனு வாபஸ்!

சென்னை : கடந்த மார்ச் 6 முதல் 8 வரை, மத்திய அமலாக்கத்துறை (ED) டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் திடீர்…

3 hours ago