ஒடும் காரில் துடிதுடிக்க பள்ளி மாணவி..வாயில் மதுவை ஊற்றி சக மாணவர்கள் வெறிச்செயல்.! அதிர்ச்சி சம்பவம்

Published by
kavitha
  • ஹரியானாவில் பள்ளி மாணவிக்கு மதுவை ஊற்றிக் கொடுத்து பாலியல் வன்கொடுமை
  • சக மாணவர்களின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தேசிய பெண் குழந்தைகள் தினம் அன்றே ஹரியானா மாநிலத்தில் ஓடும் காரில் பள்ளி மாணவியை ஒருவரை கடத்தி  பாலியல் வன்கொடுமை செய்த கொடூரச் சம்பவம் அரங்கேறி உள்ளது.

இந்த அதிர்ச்சி சம்பவம் ஆனது ஹரியானா மாநிலம் பானிபட் அருகே உள்ள மாதிரி நகரத்தில் உள்ள பிரதான பூங்கா பகுதியிலேயே கொடூர சம்பவம் அரங்கேறி உள்ளது. பாதிக்கப்பட்ட மாணவி  கடந்த வெள்ளிக்கிழமை அன்று மாலை 5 மணிக்கு தன் டியூஷன் வகுப்புக்கு செல்வதாகக் கூறி விட்டு தன் இரு சக்கர வாகனத்தில் சென்றவர்.அதன் பின் வீடு திரும்பவில்லை மேலும் நள்ளிரவு ஆகியும் மாணவி வீடு திரும்பாததால் அச்சமடைந்த பெற்றோர்  மாணவியை பல இடங்களில் தேடினர். ஆனால் எங்கே  தேடியும் மாணவி கிடைக்க வில்லை இவ்வாறு தேடி கொண்டிருக்கும் பொழுது டி.ஏ.வி. பூங்காவின் அருகே மாணவி மயக்க நிலையில் கிடந்துள்ளார் அடையாளம் காணப்பட்ட அவரை பெற்றோர்  தனியார் மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை பிரிவில் மாணவி அனுமதித்தனர்.

Related image

தன்னிலை அறியாமல் மயக்கத்தில் இருந்த அவர் மயக்கம் தெளிந்தவுடன் மாணவியிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.அதற்கு பதிலளித்த மாணவி கூறிய பதில்கள் அதிர்ச்சி அடைய வைத்தது.

பாதிக்கப்பட்ட மாணவி கூறுகையில் பிறந்த நாள் கொண்டாட்டம் நடைபெறுவதாக கூறி என்னுடைய நண்பர்கள் அருகே உள்ள பூங்கா பகுதிக்கு அழைத்துச் சென்றதாகவும்.தான் முதலில் வரமாட்டேன் என்று சொன்னேன் என்னை கட்டாயப்படுத்தி பூங்காவுக்கு அழைத்துச் சென்றவர்கள், அவர்கள் வைத்திருந்த மதுவை கட்டாயப்படுத்தி என்னை அருந்த செய்தனர். நான் மயகமடைந்து விட்டேன் என்று கூறினார்.

 

மேலும் இது கூறித்து போலீசார் கூறுகையில் இரவு நேரம் என்பதால்  மயக்கமடைந்த மாணவியை அந்த நபர்கள் தங்களது காரில் ஏற்றி ஓடுகின்ற காரில் வைத்தே பாலியல் வன்கொடுமை செய்து உள்ளனர். இதனையடுத்து மயக்கமடைந்த நிலையில் ரத்த காயங்களுடன் மாணவியை அந்த கும்பல் பூங்கா அருகே போட்டுவிட்டு சென்று உள்ளனர் என்று தெரிவித்தனர்.

இந்த கொடூர செயல் தொடர்பாக  ஆஷிஷ் மற்றும் விஷ்ணு ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து உள்ளனர். 4 பேர் இந்த குற்றச்சம்பவத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட  நிலையில் அவர்கள் மீது பல பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தலைமறைவாகி உள்ள மேலும் இருவரை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

ஹரியானாவில் மட்டும்  இதுபோன்ற பாலியல் வன்கொடுமை சம்பவங்கள்  நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி கடந்த 7 மாதத்தில் மட்டும் 99 புகார்கள் பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

AFG vs ENG: இந்த டார்கெட்டை அடிச்சு காமிங்க! சதம் விளாசி இங்கிலாந்துக்கு பெரிய இலக்கு வைத்த இப்ராஹிம்!

லாகூர் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றயை போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் லாகூரின் கடாபி மைதானத்தில்…

7 minutes ago

அடுத்த மகா கும்பமேளா மணலில் தான் நடைபெறும்! ‘ஷாக்’ கொடுக்கும் பருவநிலை ஆர்வலர்!

டெல்லி : கும்பமேளா நிகழ்வு என்பது கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய ஆறுகள் ஒன்றாக கூடும் திரிவேணி சங்கமத்தில் 12…

2 hours ago

முதல்ல அரசியல் நாகரிகத்தை கத்துக்கோங்க! விஜய்க்கு CPI மாநில செயலாளர் முத்தரசன் அட்வைஸ்!

சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா இன்று மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் நடைபெற்றது. அதில்…

2 hours ago

இப்படியா விளையாடுவீங்க? பாகிஸ்தானை விளாசி தள்ளிய ஷோயிப் அக்தர்!

பாகிஸ்தான் : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து பாகிஸ்தான் அணி வெளியேறியது என்பது ரசிகர்களுக்கு ஒரு சோகமான விஷயமாக அமைந்துள்ளது.…

2 hours ago

எங்கள் தலைவரை போல பேண்ட் சட்டை அணிந்து கொண்டு நடிக்கிறீர்கள்…முதல்வரை சாடிய ஆதவ் அர்ஜுனா !

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கி 1 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில்,  கட்சியின் 2ஆம் ஆண்டு தொடக்க விழா…

3 hours ago

உங்கள் குழந்தைகளுக்கு மட்டும் மூன்றுமொழி …வாட் ப்ரோ? விஜய் ஸ்டைலில் பதிலடி கொடுத்த அண்ணாமலை!

சென்னை :  தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா இன்று மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் நடைபெற்றது. அதில்…

4 hours ago