பள்ளிப் பருவத் தேர்வுகள் திடீர் ரத்து – வெளியான அறிவிப்பு!

Published by
Edison

இலங்கை நிதி நெருக்கடி:

இலங்கை அரசு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. சுதந்திரம் அடைந்ததற்கு பிறகு மிகவும் மோசமான நிதி நெருக்கடியை இலங்கை அரசு சந்தித்து வருகிறது.இதனால்,அத்தியாவசியப் பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. அன்னிய செலாவணி கையிருப்பு இல்லாததால் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய முடியாமல் இலங்கை அரசு தவிக்கிறது.

இதனால் நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை பல மடங்கு உயர்ந்து உள்ளது.இதன் காரணமாக இலங்கையை நிதி நெருக்கடியில் இருந்து மீட்பதற்கும், மருந்து, உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கு இந்தியா கடன் வழங்கியது.

ரூ.7,500 கோடி கடன்:

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரை இலங்கை நிதியமைச்சர் ஸ்ரீ பசில் ராஜபக்ச சில தினங்களுக்கு முன்னர் டெல்லியில் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, ​இருதரப்பும் பரஸ்பர நலன் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்தனர். அதே கூட்டத்தில், உணவு, மருந்து மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்காக இலங்கைக்கு 1 பில்லியன் டாலர் கடன் வசதிக்காக SBI மற்றும் இலங்கை அரசு இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.

இலங்கைக்கு அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்காக இந்தியா 1 பில்லியன் அமெரிக்க டாலர் அதாவது (ரூ.7,500 கோடி) கடன் கொடுக்கிறது.முன்னதாக,இலங்கையின் நிதியமைச்சர் பசில் ராஜபக்சே இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இலங்கைக்கு இந்திய உதவிகள் மற்றும் இருதரப்பு விஷயங்கள் குறித்து விவாதித்தார்.

தேர்வுகள் ரத்து:

இந்நிலையில்,போதிய காகித இருப்பு இல்லாத காரணத்தினால் பள்ளிப் பருவத் தேர்வுகள் ரத்து செய்யப்படவுதாக அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி நாளை முதல் நடைபெற இருந்த பருவத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக இலங்கை கல்வித்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

தேர்வுக்கான வினாத் தாள்களை அச்சடிக்க தேவையான காகிதம் மற்றும் மையை இறக்குமதி செய்ய தேவையான அந்நியச் செலாவணி இல்லாத காரணத்தினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.இதன்காரணமாக,கிட்டத்தட்ட 4.5 மில்லியன் இலங்கை மாணவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் பாதிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.

 

Recent Posts

“பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நள்ளிரவில் மிரட்டப்பட்டுள்ளனர்” – ஆளுநர் ஆர்.என்.ரவி.!

“பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நள்ளிரவில் மிரட்டப்பட்டுள்ளனர்” – ஆளுநர் ஆர்.என்.ரவி.!

உதகை : ஊட்டி ராஜ்பவன் மாளிகையில் இன்று (ஏப்.25) காலை துணைவேந்தர்கள் மாநாடு தொடங்கியது. மாநாட்டை குடியரசு துணைத் தலைவர்…

32 minutes ago

“காஷ்மீர் எனக்கு 2 சகோதரர்களை கொடுத்துள்ளது” தாக்குதலில் தந்தையை இழந்த பெண் உருக்கம்.!

கொச்சி: நாட்டையே உலுக்கிய கடந்த செவ்வாய்க்கிழமை ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த கொடிய தீவிரவாத தாக்குதலில் தனது தந்தையை இழந்த கொச்சியைச்…

2 hours ago

காஷ்மீர் பயங்கரவாதிகள் ‘சுதந்திரப் போராளிகள்’.., புகழ்ந்து பேசிய பாக்., துணைப் பிரதமர்.!

இஸ்லாமாபாத் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத சம்பவத்தைத் தொடர்ந்து இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதட்டங்கள் அதிகரித்துள்ளன. முதலில் இந்தியா சிந்து…

2 hours ago

லஷ்கர் – இ – தொய்பா தளபதி சுட்டுக்கொலை.! இந்திய ராணுவம் அதிரடி..!!

பந்திபோரா : ஜம்மு-காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் இன்று காலை பயங்கரவாதிகள் இருப்பதாகக் கிடைத்த குறிப்பிட்ட உளவுத்துறை தகவலின் பேரில், இந்திய…

3 hours ago

ஆளுநர் நடத்தும் மாநாடு : அரசு & தனியார் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் புறக்கணிப்பு.!

உதகை : மாநில, மத்திய, தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாடு உதகையில் இன்று நடக்கிறது. உதகை ராஜ்பவனில் நடக்கும் இந்த…

5 hours ago

TNPSC குரூப் 4 தேர்வு நாள் அறிவிப்பு! எப்போது தேர்வு.? எத்தனை பணியிடங்கள்.?

சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப்-4 பணியிடங்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, …

6 hours ago