இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி – இன்று கூடுகிறது அனைத்து கட்சி கூட்டம்..!

Published by
லீனா

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், இன்று அதிபர் கோத்தபய ராஜபக்ஷே தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் கூடுகிறது.

பொருளாதார நெருக்கடி 

அண்டை நாடான இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அன்னிய செலவாணி வரத்து குறைந்ததால், இலங்கை அரசு இந்த பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. அத்தியாவசிய பொருட்களின் விலை எப்போதும் இல்லாத அளவிற்கு பலமடங்கு அதிகரித்து இருப்பதால் அங்கு வாழும் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்தியா வரும் தமிழ் மக்கள்..! 

அன்றாடம் பயன்படுத்தக்கூடிய உணவு பொருட்களின் விலையும் கூட பல மடங்கு அதிகரித்துள்ளதால் மூன்று வேளை உணவு உண்பதற்கு கூட மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்த நிலையில் பொருளாதார நெருக்கடி காரணமாக தங்களது வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த முடியாத சூழலில் மக்கள் பலர் அகதிகளாக இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு வரும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனர்.

அந்தவகையில் நேற்று மட்டும் 16 இலங்கை தமிழர்கள் இந்தியா வந்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் பேட்டியளிக்கையில், இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இயலாத சூழ்நிலையாலும், குடும்ப வறுமையின் காரணமாகவும்  தங்கள் இந்தியாவிற்கு வந்ததாக தெரிவித்துள்ளனர்.

அனைத்து கட்சி கூட்டம்

இந்த நிலையில் இன்று அதிபர் கோத்தபய ராஜபக்ஷே தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் கூடுகிறது. இந்த கூட்டத்தில் தற்போது நிலவக்கூடிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளது. இதனிடையே அனைத்துக்கட்சி கூட்டத்தில் இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி கலந்துகொள்ளப் போவதில்லை என்று அறிவித்துள்ளது.

Recent Posts

INDvBAN : நான் ‘கில்’லி டா! சதம் விளாசிய கில்! இந்தியா அசத்தல் வெற்றி!  

INDvBAN : நான் ‘கில்’லி டா! சதம் விளாசிய கில்! இந்தியா அசத்தல் வெற்றி!

துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 2வது ஆட்டத்தில் இந்தியா, வங்கதேசம் அணிகள் இன்று மோதின. துபாயில் நடைபெற்ற இப்போட்டியில்…

4 hours ago

“CBSE பள்ளி இடம் எங்களுடையது தான்., ஆனால்?” அண்ணாமலைக்கு விளக்கம் கொடுத்த திருமா!

சென்னை : மும்மொழி கொள்கை பற்றிய பேச்சுக்கள் தமிழக அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய பேசுபொருளாகி உள்ள நிலையில், பாஜக மாநில…

7 hours ago

பனாமா ஹோட்டலில் அடைத்து வைக்கப்பட்ட இந்தியர்கள்! தூதரகம் அளித்த புதிய தகவல்.!

பனாமா : அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் பனாமாவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். சிலர் ஜன்னல்…

8 hours ago

INDvBAN : ஆட்டம் காட்டிய இந்திய பவுலர்கள்.., நிலைத்து ஆடிய வங்கதேச வீரர்கள்! 229 டார்கெட்!

துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 2வது ஆட்டத்தில் இந்தியா, வங்கதேசம் அணிகள் இன்று மோதுகின்றன. துபாயில் நடைபெற்று வரும் …

8 hours ago

மீனவர் பிரச்னை: “நிரந்தர தீர்வு வேண்டும்” – முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்.!

சென்னை : ராமேஸ்வரத்தை சேர்ந்த மேலும் 10 மீனவர்களை இலங்கை கடற்படையினர் இன்று நடுக்கடலில் கைது செய்துள்ளனர். இலங்கை கடல்…

8 hours ago

அஞ்சலை அம்மாள் நினைவு நாள்: ‘பெண்கள் பாதுகாப்பை மீட்டெடுக்க உறுதி ஏற்போம்’ – தவெக தலைவர் விஜய்.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு, கடந்த பிப்., 2ம் தேதி சென்னை  பனையூரில்…

9 hours ago