மார்பகம் அறுவை சிகிக்சை செய்து கொண்ட ஒரே குடும்பத்தை சார்ந்த ஏழு பெண்கள் .!

Default Image
  • அமெரிக்காவை சேர்ந்த ஒரு குடும்பத்தை சேர்ந்த 7 பெண்கள் தங்கள் மார்பகம் மட்டுமல்லாமல் கர்ப்பப்பை மற்றும் ஃபாலோபியன் தொடர்புடைய பாகங்களையும் அறுவை சிகிச்சை மூலம் அகற்றினார்.
  • தற்போது புற்றுநோய் வர வாய்ப்பு இல்லை என மருத்துவர்கள் கூறிஉள்ளனர்.

பிரபல நடிகை ஏஞ்சலினா ஜோலி தாய் கர்ப்பப்பை புற்றுநோயால் இறந்தார். அதனால் தனக்கும் அதே போன்று நேரிடலாம் என்ற பயத்தில் தனது இரண்டு மார்பகங்களையும் அறுவை சிகிச்சை கொண்டார்.

அந்த நோயை ஏற்படுத்தும் ஜீன்கள் தன்னுடன் உடலிலும் இருப்பது தெரியவந்ததால்  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்படி அவர் செய்தார். இவரைப்போலவே அமெரிக்காவை சேர்ந்த ஒரு குடும்பத்தை சேர்ந்த 7 பெண்கள் தங்கள் மார்பகம் மட்டுமல்லாமல் கர்ப்பப்பை மற்றும் ஃபாலோபியன் குழாய்கள் என்னும் கர்ப்பப்பை உடன் தொடர்புடைய பாகங்களையும் அறுவை சிகிச்சை மூலம் அகற்றினார்.

 

இவர்களின் உடலில் புற்றுநோயை உருவாக்கும், BRCA ஜீன் உள்ளதா என கடந்த 2015-ம்ஆண்டு பரிசோதனை ஒன்றை மேற்கொண்டனர். அந்த சோதனையின் முடிவுகளில் அவர்கள் ஏழு பேருக்கும் புற்றுநோயை உருவாக்கும் BRCA ஜீன்  உள்ளது என தெரிவித்தனர்.

இதை தொடர்ந்து உடனே 7 பேரும் மார்பகங்கள், கர்ப்பப்பை மற்றும் ஃபாலோபியன் குழாய்களை அறுவை சிகிச்சை மூலம் அகற்றினர். இதனால் அனைவரும் பல வேதனைகளை அனுபவித்தனர்.

இந்நிலையில் சமீபத்தில் பரிசோதனை செய்து ஆய்வகத்தில் இருந்து அவர்களுக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. அவர்களை அழைத்து  உங்களால் இனி உங்கள் சந்ததிக்கு புற்றுநோய் அபாயம் இல்லை என கூறினார்.

காரணம் உங்கள் பரிசோதனை முடிவுகள் பார்த்ததில் புற்று நோய் வருவதற்கான வாய்ப்பு எதிர்பார்த்தது போல் ஆபத்தான அளவில் இல்லை ,  இன்னும் சொல்லப் போனால் உங்களுக்கு புற்றுநோய் வர வாய்ப்பு இல்லை என்று கூட சொல்லலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
kaliyammal seeman
Rain update in TN
BAN VS NZ
Shankar - dragon
Madras High court - Isha Yoga centre
india vs pakistan - shreyas iyer