கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கைவிடப்பட்ட செல்வராகவன் இயக்கத்தில் சந்தானம் நடித்த மன்னவன் வந்தானடி படத்தை மீண்டும் தொடங்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
இயக்குநர் செல்வராகவன் தமிழ் சினிமாவில் பல நல்ல படங்களை தந்தவர். இவரது இயக்கத்தில் வெளியான புதுப்பேட்டை, காதல் கொண்டேன், ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, என். ஜி. கே உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதனிடையில் அவர் இயக்கிய படமான எஸ். ஜே.சூர்யா நடித்த நெஞ்சம் மறப்பதில்லை, சந்தானம் நடித்த மன்னவன் வந்தானடி ஆகிய படங்களின் பணிகள் சில வருடங்களுக்கு முன்பு தொடங்கியும் இன்னும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர் புதுப்பேட்டை 2 படத்தினை இயக்கும் பணிகளில் மும்முரமாக செயல்பட்டு வருகிறார்.
இதில் செல்வராகவன் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் உருவான திரைப்படம் ‘மன்னவன் வந்தானடி’. இந்த படத்தின் படப்பிடிப்பு சில நாட்கள் மட்டுமே நடைபெற்ற நிலையில் பைனான்ஸ் பிரச்சினை காரணமாக தடை செய்யப்பட்டது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தை தயாரிப்பதாக கூறி தயாரிப்பாளர் ஒருவர் முன் வந்துள்ளதாகவும், எனவே இந்த படத்தை மீண்டும் தொடங்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் இதனை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்கா : நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியதாக 104 இந்தியர்களை அமெரிக்க ராணுவ விமானம் மூலம் நாடு கடத்தப்பட்ட விஷயம் பெரிய…
சென்னை : விடாமுயற்சி திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பிப்ரவரி 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், படம் கலவையான விமர்சனத்தை…
மகாராஷ்டிரா : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி அசத்தலான வெற்றியை பதிவு செய்துள்ளது. …
புதுச்சேரி : காரைக்கால் கந்தூரி விழாவை முன்னிட்டு, அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என மாவட்ட புதுச்சேரி…
திருநெல்வேலி : முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் இன்று (7.2.2025) திருநெல்வேலியில் நடைபெற்ற அரசு விழாவில், 75,151 பயனாளிகளுக்கு 167 கோடி ரூபாய்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடர் இந்த மாதம் தொடங்கப்படவுள்ள நிலையில், இந்திய அணி ரசிகர்களின் முழு கவனமும் ரோஹித் ஷர்மாவின்…