டிராப்பான படத்தை மீண்டும் தொடங்க இணையும் செல்வராகவன்-சந்தானம் கூட்டணி.!

Published by
Ragi

கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கைவிடப்பட்ட செல்வராகவன் இயக்கத்தில் சந்தானம் நடித்த மன்னவன் வந்தானடி படத்தை மீண்டும் தொடங்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

இயக்குநர் செல்வராகவன் தமிழ் சினிமாவில் பல நல்ல படங்களை தந்தவர். இவரது இயக்கத்தில் வெளியான புதுப்பேட்டை, காதல் கொண்டேன், ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, என். ஜி. கே உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதனிடையில் அவர் இயக்கிய படமான எஸ். ஜே.சூர்யா நடித்த நெஞ்சம் மறப்பதில்லை, சந்தானம் நடித்த மன்னவன் வந்தானடி ஆகிய படங்களின் பணிகள் சில வருடங்களுக்கு முன்பு தொடங்கியும் இன்னும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர் புதுப்பேட்டை 2 படத்தினை இயக்கும் பணிகளில் மும்முரமாக செயல்பட்டு வருகிறார்.

இதில் செல்வராகவன் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் உருவான திரைப்படம் ‘மன்னவன் வந்தானடி’. இந்த படத்தின் படப்பிடிப்பு சில நாட்கள் மட்டுமே நடைபெற்ற நிலையில் பைனான்ஸ் பிரச்சினை காரணமாக தடை செய்யப்பட்டது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தை தயாரிப்பதாக கூறி தயாரிப்பாளர் ஒருவர் முன் வந்துள்ளதாகவும், எனவே இந்த படத்தை மீண்டும் தொடங்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் இதனை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Published by
Ragi

Recent Posts

பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ் : நாளை விண்ணில் பாய்கிறது எலான் மஸ்கின் க்ரூ டிராகன்!

வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த வருடம் ஜூன் மாதம் ஸ்டார்…

4 hours ago

“இதற்காகவே நாங்கள் பெரியாரை கொண்டாடுகிறோம்” நிர்மலா சீதாராமனுக்கு பதில் கொடுத்த விஜய்!

சென்னை : பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த…

5 hours ago

இது எங்க காலம்.! ஐசிசி தரவரிசையில் எகிறி அடிக்கும் இந்திய கிரிக்கெட் வீரர்கள்!

டெல்லி : அண்மையில் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றிய கொண்டாட்டத்தில் இந்திய அணி வீரர்கள் இருக்கும்…

6 hours ago

30 பேர் சுட்டுக்கொலை! 190 பேர் மீட்பு! மற்றவர்கள் நிலை? பாக். ரயில் கடத்தல் அப்டேட்…

இஸ்லாமாபாத்  : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை நேற்று…

6 hours ago

யாருக்கு அறிவில்லை? அமைச்சர் பி.டி.ஆர் vs அண்ணாமலை வார்த்தை போர்!

சென்னை : தேசிய கல்வி கொள்கையை ஆதரிக்கும் வகையில் உள்ள PM Shri திட்டத்தில் தமிழகத்தை இணைக்க மத்திய அரசு…

7 hours ago

மார்ச் 22-ஐ குறிவைத்து காத்திருக்கும் திமுக! பல்வேறு மாநில ஆளும்கட்சி, எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு!

சென்னை : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளதாக திமுக தொடர்ந்து கூறிவருகிறது. இந்த தொகுதி…

9 hours ago