அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குறித்து அவரது சகோதரி வெளியிட்ட ரகசிய பதிவு.
அமெரிக்காவில் அடுத்த அதிபருக்கான தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ட்ரம்பின் சகோதரி மேரி ட்ரம்ப், ட்ரம்பின் குடியேற்ற கொள்கை குறித்து விமர்சித்து பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, ‘அதிபர் ட்ரம்பிற்கு கொள்கை என்று எதுவுமே இல்லை. அவர் கொடூரமானவர். அவர் பொய்யரும் கூட.’ என அவரது ரகசிய பதிவில் தெரிவித்துள்ளார்.
இந்த ரகசிய பதிவு, ட்ரம்பின் மருமகள் மூலம் கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில், மேரி ட்ரம்ப், உலகின் கொடூரமான மனிதனை என் குடும்பம் எப்படி உருவாக்கியது என ஒரு புத்தகத்தை கடந்த ஆண்டு வெளியிட்டிருந்தார். இந்த புத்தகம் குறித்து வெள்ளை மாளிகை ‘பொய்களின் புத்தகம்’ என தெரிவித்திருந்தது.
மேரி ட்ரம்ப் வெளியிட்டுள்ள அந்த ரகசிய பதிவில், தனக்காக கல்லூரி நுழைவு தேர்வை எழுத அதிபர் ஒருவருக்கு பணம் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார் என குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு குறித்து அதிபர் ட்ரம்போ, வெள்ளை மாளிகையோ எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…