இத்தாலி முழுவதும் சீல் வைப்பு.! மீறுவோருக்கு சிறைத்தண்டனை பிரதமர் அறிவிப்பு.!

Published by
பாலா கலியமூர்த்தி

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா என்ற பெயரை கேட்டாலே மக்கள் அலறி ஓடுகின்றனர். சீனாவை தொடர்ந்து இத்தாலியில் இதுவரை 463 பேர் பலியாகி உள்ளனர். 9,172 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளதால் பலி எண்ணிக்கை பலமடங்கு அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.  கொரோனா அந்நாட்டில் வேகமாக பரவி வருவதால் நாடு முழுதும் ஒட்டுமொத்தமாக சீல் வைக்கப்படுவதை ஒட்டி Sicily மற்றும் Sardinia, தீவுகள் உள்பட இத்தாலியின் 6 கோடி மக்களும் பாதுகாப்பு வளையத்தில் கொண்டுவரப்படுகின்றன. இதற்காக புதிய கட்டுப்பாட்டுச் சட்டங்கள் உருவாக்கப்பட்டு அவை வரும் 3ம் தேதி வரை அமலில் இருக்கும் என அந்நாட்டு பிரதமர் அறிவித்துள்ளார்.

இதனிடையே எதாவது அவசரம் மற்றும் மருத்துவ தேவைகளுக்காக மட்டுமே மக்கள் நடமாட்டத்திற்கு அனுமதி வழங்கப்படும். இதைத் தவிர்த்து மக்கள் வீடுகளில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அரசு கட்டுப்பாடு சட்டத்தை மீறினால் அவர்களுக்கு சிறைத் தண்டனை உள்ளிட்ட அபராதங்கள் விதிக்கப்படும். பொது இடங்களில் கூடுவது தடை செய்யப்பட்டுள்ளது. அனைத்து விதமான தனியார், அரசு, எந்தவொரு நிகழ்ச்சிகளும் நடத்த அனுமதி கிடையாது. திரையரங்குகள், பள்ளி, கல்லூரி என அனைத்தும் மூடப்படுகிறது. ஆனால் கொரானா தடுப்பு நிலையங்கள் மட்டும் திறந்திருக்கும். உணவு விடுதிகள், கடைகள் உள்ளிட்டவை திறந்து செயல்பட அனுமதிக்கப்பட்டாலும், வாடிக்கையாளர்கள் ஒரு மீட்டர் இடைவெளியை பின்பற்றுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து சுகாதாரப் ஊழியர்களுக்கு விடுமுறைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது என பிரதமர் தெரிவித்துள்ளார். 

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

க்ரிப்டோ கரன்சி விளம்பரம் செய்த த்ரிஷா? அதிர்ச்சியின் அடுத்த நொடியே இன்ஸ்டாவில் அந்த பதிவு.!

க்ரிப்டோ கரன்சி விளம்பரம் செய்த த்ரிஷா? அதிர்ச்சியின் அடுத்த நொடியே இன்ஸ்டாவில் அந்த பதிவு.!

சென்னை : நடிகை த்ரிஷாவின் எக்ஸ் தள பக்கத்தில் திடீரென க்ரிப்டோ கரன்சி விளம்பரம் வந்ததால், ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதில், அவர்…

29 minutes ago

INDvsENG : 3வது ஒருநாள் போட்டி… சாதனை படைக்க காத்திருக்கும் இந்திய வீரர்கள்…

அகமதாபாத் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி நாளை (பிப்ரவரி 12 ஆம் தேதி)…

1 hour ago

தவெகவில் எத்தனை அணிகள்? குழந்தைகள் அணி உள்பட முழு பட்டியல் வெளியீடு!

சென்னை : தவெக தலைவர் விஜய்யை தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சென்னையில் இன்று இரண்டாவது நாளாக சந்தித்து…

2 hours ago

காசா பணயக்கைதிகளை விடுவிக்காவிட்டால் இது தான் நடக்கும்…ஹமாஸ்க்கு கடும் எச்சரிக்கை விடுத்த டிரம்ப்!

அமெரிக்கா : இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான பிரச்சனை நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகிறது. இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களின்போது பல ஆயிரம்…

3 hours ago

“அனைவருக்கும் மகிழ்ச்சியான, தைப்பூசத் திருநாள் வாழ்த்துகள்” – பிரதமர் மோடி பதிவு.!

சென்னை : தமிழ் கடவுளான முருகப்பெருமானுக்கு மிகவும் உகந்த நாளானதைப்பூச திருவிழா முருகனின் அறுபடை வீடுகள் மட்டுமன்றி அனைத்து பகுதி…

3 hours ago

INDvENG : 3வது ஒருநாள் போட்டி… வானிலை நிலவரம், பிட்ச் ரிப்போர்ட்! இரு அணி வீரர்கள் விவரங்கள்!

அகமதாபாத் : இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடுவதற்கு முன்பு தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள்…

3 hours ago