கொரோனா என்னும் கொடூரனை விரட்ட உலகமே போராடிக்கொண்டு இருக்கிறது .இதற்கு தடுப்பூசிகள் கண்டுபிடிப்பதில் விஞ்ஞானிகள் ,மருத்துவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் .சமமீபத்தில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் கண்டுபிடித்த மருந்து எதிர்பார்த்த பலனை தந்துள்ளதாக அறிவித்தது .இந்தியாவில் கோவாக்சின் என்ற தடுப்பு மருந்து பரிசோதிக்கப்பட்டு வருகிறது .
இந்நிலையில் லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரியின் விஞ்ஞானிகள் ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளனர் .அதில் தாங்கள் கண்டுபிடித்துள்ள தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்று தெரிவித்துள்ளனர் .
ஆரம்ப காலக்கட்டத்தில் குறைந்த அளவிலேயே தடுப்பூசியை பரிசோதிக்கபட்டதாகவும் தற்பொழுது இது சுமார் 300 பேருக்கு இந்த பரிசோதனையை விரிவுபடுத்துவதாகவும் கல்லூரியின் பேராசிரியரான டாக்டர் ராபின் ஷாடோக் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார் .
இந்த தடுப்பூசியால் எந்த வித பக்க விளைவுகளும் இல்லை என்றும் அக்டோபரில் பல ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடுவதைத் தொடங்க போதுமான பாதுகாப்புத் தரவு இருக்கும் என்று நம்புகிறேன் என்றார்.பிரிட்டனில் கோவிட்-19 நோய்த்தொற்றுகள் வியத்தகு அளவில் குறைந்துவிட்டதால், தடுப்பூசி செயல்படுகிறதா இல்லையா என்பதைத் தீர்மானிப்பது கடினம் என்பதால் வேறு இடங்களில் பரிசோதிக்க ஆலோசனை செய்து வருகிறோம் என்று தெரிவித்தார் .
திண்டுக்கல் : ஆந்திரப் பிரதேசம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்களில் மிருக கொழுப்பு கலந்திருந்ததாக அம்மாநில முதலமைச்சர்…
சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.600 அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று 1 கிராம் தங்கம் ரூ.6,885க்கும்,…
பெய்ரூட்: லெபனானில் பேஜர், வாக்கி டாக்கி வெடித்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று இஸ்ரேல் வான்வெளி தாக்குதலை மேற்கொண்டனர். இந்த தாக்குதலில்…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், இந்த அளவுக்கு ஒரு பிரச்சினை பெரிதாக வெடிக்கும் என யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டோம்.…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எப்போது துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்று தமிழக அரசியல்…
சென்னை : நடிகை பார்வதி நாயர் கடந்த 2022 -ம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி, தனது வீட்டில் வேலை…