முகக்கவச கழிவுகள் மூலம் இரசாயன மாசுபாட்டை விளைவிக்ககூடிய நச்சு இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு..!

Published by
Hema

முகமூடிகளின் குப்பை கழிவுகளில் மாசுபாட்டை ஏற்படுத்தக்கூடிய ஆபத்தான இரசாயனம் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

வாசிங்டனில் உள்ள ஸ்வெனசா பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளனர். அதன்மூலம் உபயோகித்து அப்புறப்படுத்தப்பட்ட முகக்கவசம் நீரில் மூழ்கி வெளிவரும்போது அதில் மாசுபாட்டை ஏற்படுத்தக்கூடிய இரசாயனம் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.

ஆய்வறிக்கையின்படி பொதுவான உபயோகப்படுத்திய முககவசத்தில் மாசுபாட்டை ஏற்படுத்தக்கூடிய சிலிக்கான் அடிப்படையிலான பிளாஸ்டிக், ஈயம், ஆண்டிமனி மற்றும் தாமிரம் உள்ளிட்ட அதிக அளவு மாசுபடுத்திகளை ஆராய்ச்சி வெளிப்படுத்துகிறது. மேலும் புதுமையான பொருட்கள், செயலாக்கம் மற்றும் எண் தொழில்நுட்பங்களுக்கான நிறுவனம் (இ.எம்.பி.எ.சி.டி) ஆல் இந்த அறிக்கை ஆதரிக்கப்படுகிறது.

மேலும், ஸ்வெனசா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியின் திட்டத் தலைவர் டாக்டர் சர்பர் சர்ப் கூற்றுபடி “தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக நாம் அனைவரும் அவசியம் முகமூடிகளை அணிந்துகொள்வது அவசியம். ஆனால் முகமூடி உற்பத்தியில் அவசரமாக அதிக ஆராய்ச்சி மற்றும் ஒழுங்குமுறைகள் தேவை, இதன்மூலம் சுற்றுச்சூழல் மற்றும் மனித ஆரோக்கியத்திற்கு தீங்கு ஏற்படுத்தக்கூடிய எந்தவொரு ஆபத்தையும் குறைக்க முடியும் என்று கூறியுள்ளார்.

கொரோனா தொற்றுநோயால் ஒற்றை பயன்பாட்டு முகமூடிகளின் அதிகரிப்பு மற்றும் அதனுடன் தொடர்புடைய கழிவுகள் மாசுபாட்டிற்கு ஒரு புதிய காரணியாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நேரடி இணைப்பை ஆராய்வதை இந்த ஆய்வு நோக்கமாகக் கொண்டுள்ளது. அதில் தற்போதுள்ள நச்சுப் பொருட்களின் அளவை அடையாளம் காணப்பட்டுள்ளது. சோதனைகள் மூலம் பரிசோதிக்கப்பட்ட அனைத்து முகமூடிகளிலும் கணிசமான அளவு மாசுபடுத்திகளை கண்டுபிடிப்புகள் வெளிப்படுத்துகின்றன.

இதனுடன் அனைத்து சோதனைகளின் போதும் மைக்ரோ / நானோ துகள்கள் மற்றும் கன உலோகங்கள் தண்ணீரில் வெளியிடப்படுகின்றன. இதன்மூலம் இது கணிசமான சுற்றுச்சூழல் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், கூடுதலாக, பொது சுகாதாரத்திற்கு ஏற்படக்கூடிய பாதிப்பு குறித்த கேள்வியை எழுப்புவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் முடிவு செய்துள்ளனர். இதில் உயிரணு இறப்பு, மரபணு நச்சுத்தன்மை மற்றும் புற்றுநோய் உருவாக்கம் ஆகியவற்றுடன் தொடர்புடைய பொருட்கள் இருப்பதால், மீண்டும் மீண்டும் அதன் வெளிப்பாடு அபாயகரமானதாக இருக்கும் என்று எச்சரிக்கிறது.

இதை எதிர்த்து, உற்பத்தி மற்றும் சோதனை செயல்பாட்டில் மேலதிக ஆராய்ச்சி மற்றும் அடுத்தடுத்த விதிமுறைகள் வைக்கப்பட வேண்டும் என்று குழு அறிவுறுத்துகிறது. இந்த அறிக்கையை டாக்டர் சர்பர் சர்ப் தொடரையில் அதில் “சீனாவில் மட்டும் உபயோகித்த பிளாஸ்டிக் முகமூடிகளின் (டிபிஎஃப்) உற்பத்தி ஒரு நாளைக்கு சுமார் 200 மில்லியனை எட்டியுள்ளது. புதிய சார்ஸ்-கோவ்-2 வைரஸின் பரவலை சமாளிக்கும் உலகளாவிய முயற்சியில், எவ்வாறாயினும், இந்த டிபிஎஃப்களை முறையற்ற மற்றும் கட்டுப்பாடற்ற முறையில் அகற்றுவது என்பது நாம் ஏற்கனவே எதிர்கொண்டுள்ள ஒரு பிளாஸ்டிக் மாசுபாடு பிரச்சினையாகும்.

மேலும்,கொரோனா தொற்றுநோய்களின் போதும் அதற்குப் பின்னரும் இந்த சுற்றுச்சூழல் அசுத்தங்களின் முக்கிய ஆதாரங்களில் ஒன்றாக டிபிஎப்கள் இருக்கக்கூடும் என்பதை எங்கள் கண்டுபிடிப்புகள் காட்டுகின்றன. எனவே, சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைக்க டிபிஎப்களை உற்பத்தி செய்தல் மற்றும் அகற்றுவது / மறுசுழற்சி செய்யும் போதும் கடுமையான விதிமுறைகளை அமல்படுத்த வேண்டியது அவசியம்.

ஆகையால், சுற்றுச்சூழலுக்குள் நுழையும் இந்த துகள்களின் அளவுகள் மற்றும் சாத்தியமான தாக்கங்கள் மற்றும் சாதாரண சுவாசத்தின் போது பயனர்களால் உள்ளிழுக்கப்படும் அளவுகள் ஆகியவற்றை தீர்மானிக்க முழு விசாரணை அவசியம்.

Published by
Hema

Recent Posts

கட்சி தொடங்கிய உடனே நான்தான் முதலமைச்சர் என கூறுவது மக்களிடையே எடுபடாது – மு.க.ஸ்டாலின்!

கட்சி தொடங்கிய உடனே நான்தான் முதலமைச்சர் என கூறுவது மக்களிடையே எடுபடாது – மு.க.ஸ்டாலின்!

சென்னை : நெல்லை கங்கைகொண்டானில் டாடா குழும நிறுவனத்தின் சூரிய மின்கல உற்பத்தி ஆலையை திறந்து வைப்பதற்காக இன்று முதலமைச்சர்…

9 hours ago

INDvENG : கில்லியாக கலக்கிய கில்.. 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி!

மகாராஷ்டிரா : இங்கிலாந்து மற்றும் இந்தியா ஆகிய இரண்டு அணிகளும் மோதிக்கொள்ளும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட்…

10 hours ago

எல்லாத்துக்கும் காரணமே அஜித் சார் தான்! விடாமுயற்சி குறித்து உண்மைகளை உடைத்த இயக்குநர்!

சென்னை : வழக்கமாக அஜித் படங்கள் என்றாலே அவருக்கென தனி மாஸான ஓப்பனிங் பாடல் இருக்கும். மாஸ் வசனங்களுடன் அவருடைய அறிமுக…

11 hours ago

ஐயோ மீண்டும் மீண்டுமா! சொதப்பிய ரோஹித்…வேதனையில் ரசிகர்கள்!

மகாராஷ்டிரா : இந்தியா – இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல்…

11 hours ago

“இதுக்கா என் படத்தை வேணாம்னு சொன்னீங்க”…வைரலாகும் விடாமுயற்சி மீம்ஸ்கள்!

அஜித் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள விடாமுயற்சி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், பலரும்…

12 hours ago

படித்துவிட்டு போராட்டம் பண்ணுங்க..ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் அட்வைஸ்!

டெல்லி : யூனிவர்சிட்டி கிராண்ட்ஸ் கமிஷன் (UGC) சமீபத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிப்பதற்கான தேடுதல் குழுவின் அமைப்பில் மாற்றங்களை அறிவித்திருந்தது. அறிவிக்கப்பட்ட…

13 hours ago