தூங்கும்போது கூட சார்ஜ் செய்யும் கருவி – விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு..!

Published by
Edison

தூங்கும்போது கூட சார்ஜ் செய்யும் ஒரு புதிய கருவியை கலிபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

கலிபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குழுவான சான் டியாகோ ,மனித உடலில் உருவாகும் ஆற்றலைப் பயன்படுத்தி ஸ்மார்ட்போன்கள் மற்றும் கைக்கடிகாரங்களை சார்ஜ் செய்ய உதவும் ஒரு சிறிய வடிவிலான கருவி ஒன்றை உருவாக்கியுள்ளது.

இது தொடர்பாக,இந்த ஆய்வில் பங்கேற்ற ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில்,”இந்த கருவியை அணிவதால், பத்து மணி நேரம் தூக்கத்தில் கூட 24 மணி நேரம் ஒரு கடிகாரத்தை இயக்கக்கூடிய மின்னணு சாதனங்களை சார்ஜ் செய்ய முடியும் “,என்று தெரிவித்துள்ளனர்.

தூக்கத்தின் போது கூட மின்னணு சாதனங்களை சார்ஜ் செய்யலாம் :

இப்போது சந்தையில் கிடைக்கக்கூடிய பெரும்பாலான அணியக்கூடிய  சார்ஜிங் கருவிகள் மூலம் சார்ஜ் செய்ய, பயனர்கள் தீவிர உடற்பயிற்சி செய்ய வேண்டும் அல்லது சூரிய ஒளி போன்றவற்றை சார்ந்து இருக்க வேண்டும் அல்லது சாதனங்களை சார்ஜ் செய்ய வெப்பநிலையில் பெரிய மாற்றங்கள் தேவை.

ஆனால்,ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கிய இந்த புதிய கருவிமூலமாக பயனர் தூங்கும்போது கூட ஸ்மார்ட்போன்கள் மற்றும் மின்னணு கைக்கடிகாரங்களை சார்ஜ் செய்ய முடியும்.

இத்தகைய புதிய கண்டுபிடிப்பு புரட்சிகரமாகக் கருதப்படுகிறது,மேலும் ஆராய்ச்சியாளர்கள் இதை ஆற்றல் அறுவடையின் ‘ஹோலி கிரெயில்'(தூய்மையான சக்தி) என்று அழைக்கின்றனர்.

விரல்மூலம் சார்ஜிங் :

பயனர்கள் இந்த கருவியை அழுத்தும் போது அல்லது விரலில் வியர்க்கத் தொடங்கும் போது,கருவியானது ஒரு ஒட்டும் பிளாஸ்டர் போல விரலைச் சுற்றிக் கொள்கிறது.இதனால், இதற்கு ஒரு உடற்பயிற்சி தேவையில்லை.

இந்த சார்ஜிங் கருவிக்கு சக்தியை உருவாக்க விரல் நுனியைப் பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தைப் பற்றி ஆராய்ச்சியாளர் ஒருவர்  கூறுகையில் ,”இந்த கருவியில் மனித வியர்வையை உறிஞ்சக்கூடிய கார்பன் நுரையிலிருந்து தயாரிக்கப்பட்ட மின் கடத்திகள் பொருத்தப்பட்டுள்ளது.இதன்மூலம்,இந்த கருவி மின்சாரத்தை உருவாக்கும்.

அதாவது,உடலின் மற்ற பாகங்களில் நாம் வியர்வையாக இருப்பதை உணர காரணம், அந்த பகுதிகளில் நல்ல காற்றோட்டம் இல்லாததால்தான். இதற்கு நேர்மாறாக, விரல் நுனிகள் எப்போதும் காற்றில் வெளிப்படும், எனவே வியர்வை வெளியே வரும்போது ஆவியாகிவிடும்.ஆனால், அதை ஆவியாக விடாமல்,இந்த வியர்வையை சேகரிக்க எங்கள் சாதனத்தை நாங்கள் பயன்படுத்துகிறோம்.இதன்காரணமாக கணிசமான அளவு ஆற்றலை உருவாக்க முடியும்.இதன்மூலம்,மின்னணு சாதனைங்களை சார்ஜ் செய்ய முடியும்”,என்று கூறினார்.

Published by
Edison

Recent Posts

வைகாசி திருவிழா – தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஜூன் 9ஆம் தேதி உள்ளூர் விடுமுறை!வைகாசி திருவிழா – தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஜூன் 9ஆம் தேதி உள்ளூர் விடுமுறை!

வைகாசி திருவிழா – தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஜூன் 9ஆம் தேதி உள்ளூர் விடுமுறை!

தூத்துக்குடி :  திருச்செந்தூர் முருகன் கோயில் வைகாசி விசாகத் திருவிழாவையொட்டி தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஜூன் 9ம் தேதி உள்ளூர் விடுமுறை…

12 minutes ago
பாமக நிர்வாகி நீக்கம்..தலைவராக ஜோசுவா நியமனம்! ராமதாஸ் அதிரடிபாமக நிர்வாகி நீக்கம்..தலைவராக ஜோசுவா நியமனம்! ராமதாஸ் அதிரடி

பாமக நிர்வாகி நீக்கம்..தலைவராக ஜோசுவா நியமனம்! ராமதாஸ் அதிரடி

செங்கல்பட்டு : 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் பாமகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் தீயை…

58 minutes ago
என் மீது சொல்லப்பட்ட அபாண்டமான பழிகளை தட்டிவிட்டு செல்வேன் – அன்புமணி பேச்சு!என் மீது சொல்லப்பட்ட அபாண்டமான பழிகளை தட்டிவிட்டு செல்வேன் – அன்புமணி பேச்சு!

என் மீது சொல்லப்பட்ட அபாண்டமான பழிகளை தட்டிவிட்டு செல்வேன் – அன்புமணி பேச்சு!

சென்னை : நேற்று விழுப்புரம் தைலாபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், அன்புமணி குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.“50 ஆண்டுகளாக…

2 hours ago

“இதுக்காக தான் ரோஹித் விக்கெட்டை நான் கொண்டாடவில்லை”…மனம் திறந்த முகமது சிராஜ்!

மும்பை : பொதுவாகவே குஜராத் அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ் ஒரு விக்கெட் எடுத்துவிட்டார் என்றால் அந்த விக்கெட் எடுத்த குஷியை…

2 hours ago

மன்னிப்பு கேட்க முடியாது…உறுதியாக நிற்கும் கமல்! ஆதரவாக இறங்கிய தென்னிந்திய நடிகர் சங்கம்!

சென்னை : தக்லைஃப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன் உயிரே, உறவே, தமிழே’ என தொடங்கியவர் கன்னட மொழி…

2 hours ago

என் அம்மா மீது சிறு துரும்பும் பட விட மாட்டேன் – பாமக தலைவர் அன்புமணி பேச்சு!

சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) தலைவர் அன்புமணி ராமதாஸ், தனது தந்தையும் கட்சியின் நிறுவனருமான டாக்டர் ராமதாஸ் முன்வைத்த…

4 hours ago