பிரெஞ்சு நாட்டில் உள்ள பள்ளிகள் அனைத்தும் செப்டம்பர் 1 முதல் மீண்டும் திறக்கப்படும் என்று பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து பள்ளிகள், கல்லூரிகள் இன்னும் திறக்கப்படவில்லை. இந்த நிலையில் தற்போது பிரெஞ்சு நாட்டில் செப்டம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டுச்செய்தி மாநாட்டில் தெரிவித்துள்ளார்.
கடந்த வியாழக்கிழமை மட்டும் 4,771பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் , கடந்த வாரத்தில் மட்டும் 18,000க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பிரான்சின் தேசிய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. மேலும் பள்ளிகளை திறந்தால் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த இயலாது என்பதால் ஜனாதிபதியின் இந்த முடிவு ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஆசிரியர் சங்கம் ஒன்று பள்ளி திறப்பதற்கான முடிவை தள்ளி வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…
டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால். இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…