யானையுடன் நடக்கும் போது பயமா இருந்துச்சி! ஆனா பிரியும் போது கஷ்டமா இருக்கு! பிரபல நடிகர் அதிரடி!

Default Image

சென்னையில் செய்தியாளர் சந்திப்பின் போது பேசிய நடிகர் விஷ்ணு விஷால். 

இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் காடன். இந்த படத்தின் நாயகனாக ராணா டக்குபதி நாயகனாக  நடித்துள்ளார்.  மேலும், இந்த படத்தில் விஷ்ணு விஷால், புல்கிட் சாம்ராட், சோயா ஹுசைன், அஸ்வின் ராஜா, டின்னு ஆனந்த் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்நிலையில், இந்த படத்தின் செய்தியாளர் சந்திப்பின் போது பேசிய விஷ்ணு விஷால், படப்பிடிப்பின்போது எனக்கு உடலில் ஒரு அடிபட்டது. அந்த அடிதான் உடலுக்கும் மனதுக்கும் மாற்றத்தைக் கொடுத்தது. தமிழ், தெலுங்கு, இந்தி போன்ற மொழிகளில் காடன் படம்  தயாரிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவர் கூறுகையில், பிரபு சாலமன்  தனி நபராக இருந்து இந்தப் படத்திற்காக உழைத்துள்ளார். நான்  கடினமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். காடு,  இயற்கை என்றாலே எனக்கு பயம். படப்பிடிப்பில் யானையுடன் நடக்கும்போது பயமாக இருந்தது. ஆனால் யானையை பிரியும்போது வருத்தமாக இருந்தது தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
nzvsban
vidaamuyarchi ott release date
kaliyammal tvk
anbumani sekar babu
IND vs PAK
dragon movie box office