மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு விரைவில் மணிமண்டபம் கட்டப்படும் என எஸ்.பி.பியின் மகன் சரண் பேட்டி
பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் 40,000-ற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்திருக்கிறார். சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதினைப் 6 முறை பெற்றிருக்கிறார். இதுவரை தேசிய விருதினை 4மொழிகளுக்குப் பெற்ற ஒரே திரைப்படப் பின்னணிப் பாடகர் எஸ்பிபி ஒருவரே.
இன்று பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மறைந்த்து ஓராண்டு ஆகிவிட்டதையொட்டி ரசிகர்கள் மற்றும், திரையுலக பிரபலங்கள் அவரது புகைப்படங்களை பதிவிட்டு நினைவு கூர்ந்து வருகிறார்கள்.
அந்த வகையில், முதலாம் ஆண்டு நினைவு நாளை திரை இசை கலைஞர்கள் சங்கம் மற்றும் அறக்கட்டளை சார்பாக நடத்தப்படுகிறது. இதில் இசைஞானி இளையராஜா, எஸ்பிபி சரண் மற்றும் பின்னனி பாடகர் சுரேந்தர், தினா, செல்வமணி உள்ளிட்டோர் கலந்துக் கொண்டு அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
அஞ்சலி செலுத்திய பின் பேசிய எஸ்பிபி சரண் “எஸ்.பி.பி-க்கு மணிமண்டபம் கட்ட அரசின் உதவி கேட்டு இருக்கிறோம்.. யார் வேண்டுமானாலும் உதவலாம் எஸ்.பி.பி-யின் மணிமண்டபம் கட்டி முடிக்க ஓராண்டாகும்.. கொரோனா காலகட்டத்தால் அப்பா நினைவிடத்தை பார்க்க யாரையும் அனுமதிக்கவில்லை மன்னிக்கவும்” என தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் : விழுப்புரத்தில் நடைபெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அங்கீகார வெற்றி விழாவில் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன்…
சென்னை : கடந்த வாரம் வெள்ளிக்கிழமை (மார்ச் 14) அன்று தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. அன்றைய தினமே…
சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று நடைபெறுகிறது. சட்டப்பேரவை கூடியதும் மறைந்த எம்எல்ஏக்கள் மற்றும் டாக்டர்…
சத்தீஸ்கர் : நடந்து முடிந்த சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் டி20 கிரிக்கெட் தொடர், ஓய்வு பெற்ற கிரிக்கெட் ஜாம்பவான்களை மீண்டும்…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க விஞ்ஞானி லெக்ஸ் பிரிட்மெனின் பாட்காஸ்டர் லெக்ஸ் ஃப்ரிட்மேனுடனான நேர்காணலில், "இந்தியாவா? பாகிஸ்தானா?…
சென்னை : தமிழ்நாடு அரசின் பொது நிதிநிலை அறிக்கை கடந்த 14-ஆம் தேதியும், வேளாண்மைக்கான நிதிநிலை அறிக்கையை 15-ஆம் தேதியும் தாக்கல்…