எஸ்.பி.ஜனநாதனின் மரண வடு மறையாத நிலையில், அவரது தங்கை மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.
இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் தமிழ் சினிமாவில் இயற்கை என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் அறிமுகமானார். இவர் இயக்கிய முதல் திரைப்படமே தேசிய விருதை பெற்றது. இதனை தொடர்ந்து, பேராண்மை, ஈ, புறம்போக்கு போன்ற படங்களை இயக்கி உள்ளார். தற்போது மக்கள் செல்வன், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகும் லாபம் என்ற படத்தை இயக்கி வந்தார்.
இந்த படத்தின் இறுதிகட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று நிலையில், மார்ச் 11ஆம் தேதி இயக்குனர் ஜனநாதன் சுயநினைவின்றி இருந்துள்ளார். இதனையடுத்து அவர் அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது மூளையில் ரத்த கசிவு ஏற்பட்ட காரணத்தால் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதனை தொடர்ந்து, மார்ச் 14-ஆம் தேதி காலை ஜனநாதனுக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இவரது மரணம் வடுக்கள் இன்னும் மறையாத நிலையில், அவரது தங்கையான லட்சுமி, அண்ணன் மறைவை தாங்க இயலாமல், கடந்த இரண்டு நாட்களாக அழுது கொண்டே இருந்துள்ளார். இந்த நிலையில், இவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இது ஜனநாதனின் வீட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
டெல்லி : உச்ச நீதிமன்றம், ஒரு முக்கியமான தீர்ப்பில், குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்கள் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க…
கோவை : கோவையில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பூத் கமிட்டி மண்டல கருத்தரங்கம் ஏப்ரல் 26 மற்றும் 27…
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 2025 ஆம் ஆண்டு சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்…
சென்னை : அதிமுக – பாஜக வருகின்ற 2026 சட்டமன்றத்தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக அறிவித்தததை தொடர்ந்து அரசியல் வட்டாரத்தில் இந்த…
டெல்லி : ஏப்ரல் 16 அன்று டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடியது. இந்தப்…
சென்னை : நடிகர் சந்தானம் தொடர்ச்சியாகவே ஹீரோவாகவே படங்களில் நடித்து வரும் நிலையில் மீண்டும் காமெடியனாக அவரை பார்க்க மாட்டோமா…