எவிக்சனில் இருந்து காப்பாற்றப்பட்ட நிஷா.! கண் கலங்கும் அர்ச்சனா.!

Default Image

பிக்பாஸ் நிகழ்ச்சியின் எவிக்சனிலிருந்து நிஷா காப்பாற்றப்பட்டதாக கமல் அறிவிக்க அர்ச்சனா கண் கலக்குகிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒருவர் எவிக்ட் ஆவது வழக்கம் .அந்த வகையில் இந்த வாரம் ஆரி, ஷிவானி,அனிதா , ஆஜீத்,ரம்யா,நிஷா மற்றும் சனம் ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர் .இதில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறுபவர் யார் என்ற கேள்வி அனைவரிடத்திலும் எழுந்துள்ளது

நேற்றைய தினம் ஆரி மற்றும் ரம்யா ஆகியோர் காப்பாற்றப்பட்டனர் . இந்நிலையில் தற்போது வெளியான செக்கன்ட் புரோமோவில் 60 நாட்களில் பிக்பாஸ் வீட்டில் நீங்கள் என்ன செய்தீர்கள் என்று கூற பிக்பாஸ் போட்டியாளர்களிடம் கேள்விகள் கேட்க , அனைவரும் திணறியதும், பிக்பாஸிடமிருந்து அனைவரும் மொக்க வாங்கியதும் இந்த வாரம் பார்த்தோம் .அதனை குறித்த கேட்ட கமல் ,வெளியே சென்று கூற கூடாது என்ற ரகசியத்தை கடைசி வரை காப்பாற்றியதற்காக பாராட்டுகள் என்று நிஷா கேட்கிறார்.அப்போது நான் ரகசியம் ஒன்று கூறுகிறேன் என்று கூறிய நிஷா காப்பாற்றப்பட்டதாக தெரிவிக்கிறார் .

இதனால் கண் கலங்கும் அர்ச்சனா நிஷாவை தொலைச்சிட்டோம் என்ற பயம் இருந்ததாக கூறினார்.அதற்கு கமல் நீங்களும் தொலைந்ததை தேடிட்டு இருந்தீர்களா ,நாங்களும் வெளியே இருந்து தேடுறோம் என்று கூறுகிறார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்