இனி சவுதி பெண்கள் ‘இவர்கள்’ அனுமதி இல்லாமலும் வெளிநாடு செல்லலாம் !

சவுதி அரேபியாவில் உள்ள பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்நாட்டு அரசு 2030 விஷன் என்ற பெயரில் சவுதியை நவீனமாகமாக்கும் திட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.
இதற்காக சவுதி அரேபியாவில் 40 வருடங்கள் கழித்து திரையரங்கம் திறக்கப்பட்டது.மேலும் பெண்கள் வாகனம் ஒட்டவும் , செய்தி வாசிக்கவும் அனுமதி கொடுக்கப்பட்டது.இது போன்ற விஷயங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.
இந்நிலையில் சவுதியில் உள்ள பெண்கள் வெளிநாட்டுக்கு செல்ல வேண்டும் என்றால் கணவன்,தந்தை அல்லது குடும்பத்தில் உள்ள ஒரு ஆண்களிடம் அனுமதி பெற்ற பிறகே செல்ல வேண்டும் கட்டுப்பாடு இருந்தது.
சமீபத்தில் சவுதியில் உள்ள இளம் பெண்கள் கனடா , ஆஸ்திரேலியாவிற்கு அடைக்கலம் நாடி சென்றனர்.இதனால் இந்த விதிக்கு சர்வேதேச கடும் விமர்சனங்கள் எழுந்தது.மேலும் இந்த கட்டுப்பாட்டை நீக்க வேண்டும் என கோரியும் எழுந்தது.
இந்நிலையில் சவுதி அரேபியா அரசு அந்த கட்டுப்பாட்டை நீக்கி உள்ளது.மேலும் 21 வயதை கடந்த பெண்கள் ஆண்கள் அனுமதி இல்லாமல் பாஸ் போர்ட் பெற்றுக்கொள்ளவும் , வெளிநாட்டிற்கு செல்லவும் அனுமதித்து உள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
பெண்களை இழிவாக பேசிய விவகாரம்: “பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்க” – உயர்நீதிமன்றம் அதிரடி..!
April 17, 2025
வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!
April 17, 2025
நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட டெல்லி பயிற்சியாளர்! எச்சரிக்கை கொடுத்து அபராதம் போட்ட பிசிசிஐ!
April 17, 2025
உச்சநீதிமன்றம் என்ன சூப்பர் நாடாளுமன்றமா? கட்டத்துடன் கேள்விகளை வைத்த துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர்!
April 17, 2025
கோவையில் தவெக பூத் கமிட்டி மாநாடு.! எப்போது தெரியுமா?
April 17, 2025