மகளிர் மட்டும் மாரத்தான் !!!

Default Image

சவுதி அரேபியாவில் பெண்கள் மட்டுமே பங்கேற்ற மாரத்தான் போட்டி முதல் முறையாக நடைபெற்றுள்ளது.

சவுதியில்,  சவுதி அரேபியா விஷன் 2030 என்ற தொலைநோக்குத் திட்டத்தின் படி, பெண்களுக்கு அந்நாட்டில் இதுவரை அளிக்கப்படாத பல்வேறு உரிமைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், சனிக்கிழமை பெண்கள் மட்டுமே பங்கேற்ற முதல் மாரத்தான் போட்டி சவுதி அரேபியாவில் நடைபெற்றது. இதில் 1500 பெண்கள் கலந்துகொண்டனர். 3 கி.மீ. தொலைவுக்கு இந்த ஓட்டம் நடைபெற்றது.

அந்நாட்டுப் பெண்கள் ராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற அனுமதி வழங்குவதாக கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. முன்னதாக, சவுதியில் பெண்கள் ஆண்களின் அனுமதி இல்லாமலேயே தொழில் தொடங்கலாம் என்றும் அறிவித்திருந்தது.

இந்த ஆண்டு ஜனவரியில் அரசின் அதிகாரப்பூர்வ முடிவுகளை எடுப்பதற்கு பெண்களுக்கு அனுமதி வழங்கியது.  முதல் முறையாக கால்பந்து ஆட்டத்தை நேரில் பார்ப்பதற்கும் அண்மையில் சவுதி பெண்கள் அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் தகவலுக்கு இணைந்திடுங்கள் தினச்சுவடு

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்