கட்டப்பா கேரக்டரில் முதலில் நடிக்கவிருந்தது சத்யராஜ் இல்லையாம்.! பிரபலம் ஓபன் டாக்.!

Published by
Ragi

பாகுபலி படத்தில் சத்யராஜ் நடித்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க வைக்க திட்டமிட்டிருந்தது பாலிவுட் நடிகரான சஞ்சய் தத்தை தான் என்று விஜயேந்திர பிரசாத் தெரிவித்துள்ளார்.

தென்னிந்திய சினிமாவை உச்சத்தில் எடுத்து சென்றது பாகுபலி திரைப்படம். எஸ். எஸ். ராஜமௌலி இயக்கத்தில் 2015ல் பாகுபலி படத்தின் முதல் பாகமும், 2017ல் பாகுபலி இரண்டாம் பாகமும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது மட்டுமில்லாமல் மிகப் பெரும் வசூல் ரீதியாகவும் சாதனையை படைத்தது. இதில் முக்கிய வேடங்களில் பிரபாஸ், ராணா டக்குபதி , சத்யராஜ், நாசர், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, அனுஷ்கா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது மட்டுமில்லாமல் வசூல் ரீதியாகவும் சாதனையை படைத்தது.

இந்த படத்தில் வரும் கட்டப்பா கதாபாத்திரத்தில் நடித்த சத்யராஜூக்கு பாராட்டுகள் குவிந்தது என்றே கூறலாம். முதல் பாகத்தில் கட்டப்பா பாகுபலியை கொல்வதை தொடர்ந்து ஏன் கொன்றார் என்ற கேள்விக்கு பதிலாகவே இரண்டாம் பாகம் இருந்தது. இந்த நிலையில் தற்போது கட்டப்பா கேரக்டரில் முதலில் நடிக்க வைக்க திட்டமிட்டது சத்யராஜ் இல்லை என்றும் பாலிவுட் நடிகரான சஞ்சய் தத் என்றும் ராஜமௌலியின் தந்தையும், பாகுபலி படத்தின் திரைக்கதையாசிரியருமான விஜயேந்திர பிரசாத் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். சஞ்சய் தத் மும்பை சிறையில் இருந்ததாகவும், அவரை அழைத்து வர முயற்சித்து, அது சாத்தியமில்லை என்பது தெரிந்த பின்னரே சத்யராஜ் நடித்தார் என்றும் கூறியுள்ளார். மேலும் சத்யராஜ் அந்த கதாபாத்திரத்தில் அருமையாக நடித்ததாகவும், சஞ்சய் தத் நடித்தால் கூட இந்த பெயரை வாங்கியிருக்க மாட்டார் என்றும் கூறியுள்ளார்.

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

6 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

7 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

8 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

8 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

8 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

8 hours ago