வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன், சீமராஜா என மூன்று சிவகார்த்திகேயன் படங்களையும் இயக்கி விட்டு அடுத்ததாக இயக்குனர் பொன்ராம் புதிய படத்தை இயக்க தயாராகி உள்ளார். இவர் முதலில் விஜய் சேதுபதியிடம் ஒரு கதையைக் கூறினார். அந்த கதை சேதுபதிக்கு பிடித்துவிட்டது. இருந்தாலும், அவர் ஏற்கனவே ஒப்பந்தம் செய்த படங்கள் வரிசை கட்டி நிற்பதால், பொன்ராம் இயக்கும் படத்தில் நடிக்க குறைந்தது 1 வருடதிற்கும் மேலாகும் என விஜய் சேதுபதி தரப்பில் கூறப்பட்டதாக தகவல் வெளியானது.
அதற்குள்ளாக இயக்குனர் பொன்ராம் நடிகர் சசிகுமாரை வைத்து ஒரு புதிய படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார். சசிகுமாருக்கு கதை கூறி அவரிடம் சம்மதம் வாங்கி உள்ளார் இயக்குனர் பொன்ராம். இப்படத்தில் முக்கிய ரோலில் ராஜ்கிரண் முதலில் நடிப்பதாக இருந்தது. தற்போது அவரிடம் கால்சீட் இல்லாத காரணத்தால், சத்யராஜ் இப்படத்தில் இணைந்து உள்ளார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. விரைவில் இப்படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலலகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை…
சென்னை : நடிகர் ரஜினிகாந்த் - மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இடையிலான 1990-களில் ஏற்பட்ட உரசல்கள் பற்றி பல்வேறு…
டெல்லி : ரிசர்வ் வங்கி (RBI) ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா இன்று ரெப்போ வட்டி விகிதம் குறித்த முக்கிய அறிவிப்பை…
சென்னை : காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினருமான குமரி அனந்தன், இன்று அதிகாலை உயிரிழந்தார்.…
வாஷிங்டன் : கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு அமெரிக்கா பொருட்களுக்கு மற்ற…
பஞ்சாப் : ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி போராடி தோல்வியடைந்தது, 18…