சார்பட்டா பரம்பரை பற்றி திரைக்கதையை உருவாக்கி வருகிறேன் என்று இயக்குனர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடிப்பில் கடந்த ஜூலை 22-ஆம் தேதி அமேசான் பிரேமில் வெளியான திரைப்படம் சார்பட்டா பரம்பரை. இந்த படத்தில் ஆர்யாவிற்கு ஜோடியாக நடிகை துஷ்ரா விஜயன் நடித்திருந்தார். கலையரசன், பசுபதி, ஜான், ஷபீர் கல்லரக்கல் போன்ற பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்நிலையில், அமேசான் பிரேமில் வெளியான இந்த திரைப்படத்தை ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் தங்களது கருத்துக்களை கூறி வருகிறார்கள்.
இந்த நிலையில், சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் இயக்குனர் பா.ரஞ்சித் கூறியதாவது, சார்பட்டா பரம்பரை பற்றி எழுத்தாளர்கள் பாக்கியம் சங்கர உள்ளிட்ட சிலருடன் இணைந்து இதன் திரைக்கதையை உருவாக்கி வருகிறேன். இது, சார்பட்டா பரம்பரையின் முன் கதையாக இருக்கும் அதாவது 1925ல் இருந்து தொடங்கும் கதையாக இருக்கும். இது சார்பட்டா பரம்பரை இரண்டாம் பாகமா இல்லை வெப் சீரீசா என்பதை இப்போது என்னால் உறுதியாக கூற முடியவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…