இயக்குனர் அருண் மாதேஷ் வரன் இயக்கத்தில் செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் இணைந்து நடிக்கும் சாணிக்காயிதம் படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது.
இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் வருகின்ற மார்ச் மாதம் 5 ஆம் தேதி நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. மேலும் அடுத்ததாக தனுசை வைத்து நானே வருவேன் படத்தை இயக்க திட்டமிட்டிருந்தார். ஆனால் நடிகர் தனுஷ் தி க்ரே மேன் மற்றும் d43 படத்தில் நடித்து வருவதால் இரண்டு படங்களை முடித்துவிட்டு நானே வருவேன் படத்தில் இணைவார் என்று கூறப்ப டுகிறது. இதற்கிடையில் இயக்குனர் செல்வராவன் இயக்குனர் அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் நடிக்கவுள்ள சாணிக்காயிதம் படத்திற்கான படப்பிடிப்பில் இன்று இணைந்துள்ளார். இதனை தனது ட்வீட்டர் பக்கத்தில் உறுதி படுத்தியுள்ளார். இந்த படத்தில் இவருடன் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.
மேலும் படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ஒளிப்பதிவாளராக யக்னமூர்த்தி என்பவர் பணியாற்றவுள்ளார். இந்த படத்தின் பர்ஸ்ட் லூக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : நேற்றைய தினம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலலகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை…
சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று விழுப்புரம், தைலாபுரத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஒரு முக்கிய அறிவிப்பை…
பெங்களூரு : இன்று (ஏப்ரல் 9) நடைபெறும் ஐபிஎல் 2025-ன் 24-வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB)…
சென்னை : தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக சட்டப்பேரவையில் ஆளும் தமிழக அரசால் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க கால…
டொமினிகன் : இசை நிகழ்ச்சிக்காக ஒன்றுகூடி ஜாலியாக, வைப் செய்து கொண்டிருந்தவர்களின் ஆனந்தக்குரல், ஒரே நொடியில் அழுகுரலாக மாறிவிட்டது. ஆம்,…
சென்னை : இன்று (ஏப்ரல் 10) அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள 'குட் பேட் அக்லி' திரைப்படம் உலகம் முழுக்க ரசிகர்கள்…