சாய் பல்லவியின் தங்கையான பூஜா கண்ணன் ஸ்டண்ட் சில்வா இயக்கும் புது படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ் சினிமாவின் பிரபல ஸ்டண்ட் மாஸ்டர்களில் ஒருவராக வலம் வருபவர் சில்வா . தமிழ், தெலுங்கு,இந்தி , மலையாள என பல மொழி படங்களிலும் பணியாற்றிய இவர் தமிழில் விஜய்,அஜித் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் பணியாற்றி உள்ளதுடன் இவர் சண்டை காட்சிகளில் நடித்தும் உள்ளார்.
இதனையடுத்து சமீபத்தில் ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா அடுத்ததாக ஒரு படத்தினை இயக்க உள்ளதாகவும், அந்த படத்தின் கதை மற்றும் திரைக்கதையை பிரபல இயக்குனரான ஏ.எல்.விஜய் எழுத உள்ளதாகவும், இந்த படத்தில் சில்வாவின் மகன்களான கெவின் மற்றும் ஸ்டீவன் ஆகியோர் நடிக்க உள்ளதாகவும்,படமானது ஜாக்கிசானின் ‘கராத்தே ஜிட்’ பாணியில் உருவாக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தது .
சமுத்திரக்கனி மற்றும் ஸ்டண்ட் சில்வா முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படும் இந்த படத்தில் பூஜா கண்ணன் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இவர் முன்னணி நடிகையாக வலம் வரும் சாய் பல்லவியின் தங்கை என்பதும் ,இதுவே அவரது முதல் படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.தற்போது இயக்குனர் ஏ.எல்.விஜய்யிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வரும் இவர் ஏற்கனவே காரா எனும் குறும்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…