லட்சுமி கடாட்சத்துடன் இருக்க நெற்றியில் இப்படி குங்குமம் வைக்க வேண்டும்..!

Published by
Sharmi

லட்சுமி கடாட்சத்துடன் இருக்க நெற்றியில் எப்படி குங்குமம் வைக்க வேண்டும் என்று இன்று தெரிந்து கொள்ளுங்கள்.

ஒரு சிலரை பார்த்தவுடன் கையெடுத்து கும்பிட தோன்றும். ஒரு சிலரை பார்க்காமல் செல்ல வேண்டும் என்று தோன்றும். இதற்கு காரணம் ஒரு சிலரிடம் தெய்வ கடாட்சம் நிறைந்து இருக்கும் அதனால் அவர்களை பார்க்கும் பொழுது மனதிற்குள் ஒரு நிறைவு கிடைக்கும். முக்கியமாக மனதின் பிரதிபலிப்பே முகத்தில் தெரியும். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்ற பழமொழி கேள்விப்பட்டிருப்போம். அதுபோல தான் மனம்  தெளிவாகவும், நல்லதை நினைக்க கூடியவர்களாகவும், கள்ளம் கபடம் இல்லாமல் இருந்தால் அவர்களிடம் தானாகவே தெய்வ கடாட்சம் நிறைந்து இருக்கும்.

மனதில் பொறாமை எண்ணத்தோடு மற்றவர்களை கண்டால் வயிற்றெரிச்சல் படுபவர்களுடைய முகத்தை பார்த்த உடனே கண்டு பிடித்து விடலாம். இவர்களுடைய மனதில் அழுக்கு இருக்கும். இவர்களை யாரும் பெரிதாக பார்க்க விரும்ப மாட்டார்கள். ஒரு சிலர் நல்லதை நினைத்தாலும் 4 பேர் இருக்கும் இடத்தில் மரியாதை கிடைக்காமல் இருப்பார்கள். அதனால் உங்களது மனம் தெளிவு பெறவும், நீங்கள் தெய்வ கடாட்சத்துடன் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம். தொட்டாசிணுங்கி இலைக்கு மிகவும் பொலிவு படுத்தக்கூடிய சக்தி உள்ளது.

அதனால் அதில் சிறிது இலைகள் நன்மைக்காக என்று கூறி பறித்துக்கொள்ளுங்கள். அதனை உலரவைத்து பொடி செய்து உங்கள் வீட்டில் பயன்படுத்தக்கூடிய குங்குமத்தில் கலந்து கொள்ளுங்கள். இந்த குங்குமத்தை நெற்றியில் வைத்து கொள்வதன் மூலம் உங்களை பிடித்த கெட்ட எண்ணங்கள் மறைந்து முகம் லட்சுமி கடாட்சம் அடையும். குங்குமம் வைத்து கொள்ளும் பழக்கம் இல்லாதவர்கள் குங்குமத்தை சிறிது உச்சந்தலையில் வைத்துக்கொள்ளலாம். இதன் மூலம் உங்கள் முகம் பொலிவு பெரும்.

Recent Posts

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

1 hour ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

2 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

2 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

2 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

2 hours ago

தக் லைஃப் படத்தின் டிஜிட்டல் உரிமம் இத்தனை கோடிக்கு விற்பனையா?

சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…

3 hours ago