ஆஸ்திரேலியா அணிக்கு சாதகமான மைதானம் ஓவல்!இந்திய அணிக்கு எச்சரிக்கை விடுத்த சச்சின்!

Default Image

இந்திய அணி தனது முதல் போட்டியை தென் ஆப்பிரிக்க அணியுடன் மோதியது. இப்போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில்  நடப்பு உலகோப்பையில் இந்திய அணி தனது முதல் வெற்றியை பதித்தது.
இந்நிலையில் வருகின்ற 9-ம் தேதி இந்தியா , ஆஸ்திரேலியா அணிகளுக்கு  நடப்பு உலகோப்பையில்  14 -வது போட்டி நடைபெற உள்ளது.ஆஸ்திரேலிய அணி ஏற்கனவே விளையாடிய 2 போட்டியில் வெற்றி பெற்று  தற்போதைய உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணி பலம் வாய்ந்த அணியாக உள்ளது.
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரும் ,கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் கருத்து ஒன்றை கூறி உள்ளார்.அந்த கருத்தில் ஆஸ்திரேலியா அணியுடன் மோத உள்ள போட்டி மிக கடினமாக இருக்கும் காரணம் போட்டி நடைபெறும் ஓவல் மைதானத்தில் பந்துகள் பவுன்சர் ஆகும்.
அதனால் ஆஸ்திரேலியா அணி அதை சாதகமாக பயன்படுத்தி கொள்ளும்.மேலும் ஐ.பி.எல் போட்டிகளில் ரன் வேட்டையில் ஈடுபட்ட  வார்னர் பற்றியும் கூறியுள்ளார். எனவே இந்திய அணி வீரர்கள் எச்சரிக்கையுடன் விளையாட வேண்டும் என சச்சின் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்