உக்ரைனின் முக்கியமான செர்னோபில் எனும் அணு உலையை விட்டு ரஷ்ய படைகள் வெளியேறியுள்ளது.
ரஷ்யா உக்ரைன் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் தாக்குதல் நடத்திய முதல் நாளே ரஷ்யா, வடக்கு உக்ரைனிலுள்ள செர்னோபில் அணு உலையை கைப்பற்றி தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.
இதனையடுத்து, செர்னோபில் அணு உலை ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளதாகவும், இதனால் கோடிக்கணக்கான உயிர்கள் அச்சுறுத்தலில் உள்ளதாகவும் உக்ரைன் ஏற்கனவே தெரிவித்திருந்தது.
இந்நிலையில் இது குறித்து தெரிவித்த ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம், செர்னோபில் அணு உலை மீது பயங்கரவாத அமைப்புகள் மற்றும் தேசியவாதக் குழுக்கள் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாகவும், அதனால் தான் அணு உலையை பாதுகாப்பதற்காக கைப்பற்றினோம் எனவும் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் தற்போது உக்ரைனில் உள்ள செர்னோபில் அணு உலையை ஆக்கிரமித்திருந்த ரஷ்யப் படைகள் வெளியேற தொடங்கி உள்ளதாக உக்ரைன் அரசு அமெரிக்க பாதுகாப்பு துறையிடம் தெரிவித்துள்ளது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…