ரஷ்ய ராணுவத்தைச் சேர்ந்த மற்றொரு மேஜர் ஜெனரலை கொன்றதாக உக்ரைன் கூறியுள்ளது. மேஜர் ஜெனரல் விட்டாலி ஜெராசிமோ போரில் கொல்லப்பட்டதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் கூறுகிறது. இருப்பினும், ரஷ்யாவிடம் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
உக்ரைனில் உள்ள கார்கிவ் நகரில் நடைபெற்ற போரின்போது ரஷ்ய ஜெனரல் விட்டாலி ஜெராசிமோ கொல்லப்பட்டார். ஒரே வாரத்தில் உக்ரைன் படையின் பதிலடி தாக்குதலுக்கு பலியான 2-வது ஜெனரல் விட்டாலி ஜெராசிமோ ஆவார். ரஷ்ய இராணுவத்தின் 41-வது படை பிரிவின் தளபதியான ஜெனரல் விட்டாலி ஜெராசிமோ மூத்த அதிகாரிகளுடன் உயிரிழந்தார்.
முன்னதாக மார்ச் 3 அன்று, ரஷ்யாவின் மேஜர் ஜெனரல் ஆண்ட்ரி சுகோவெட்ஸ்கி உயிரிழந்தார் என உக்ரைன் கூறியது என்பது குறிப்பிடத்தக்கது. ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடந்த பிப்ரவரி 24ம் தேதி முதல் போர் நடந்து வருகிறது. அதே நேரத்தில், இந்த போரில் இதுவரை 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் கூறியுள்ளது.
இத்துடன் ரஷ்ய ராணுவத்தின் 290 டாங்கிகள், 999 கவச வாகனங்கள், 46 போர் விமானங்கள் மற்றும் 68 ஹெலிகாப்டர்கள் அழிக்கப்பட்டுள்ளன என்று உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூர் : பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் இன்றைய ஐபிஎல் போட்டி, மழை காரணமாக 14 ஓவர் போட்டியாக…
சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…
பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…
டெல்லி : செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில்,…
சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…
சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…