முதல் முறையாக இந்தியர்களை வெளியேற்ற உதவிய ரஷ்ய ராணுவம்!

Published by
Edison

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்ய படைகள் கடந்த 21 நாள்களாக தொடர் தாக்குதலை நடத்தி வருகின்றன.அதன்படி,கார்கிவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களையும் ரஷ்ய படைகள் கைப்பற்றியுள்ளனர். அதே சமயம், இரு நாட்டு அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் உக்ரைன் தலைநகர் கீவ்வின் குடியிருப்புகள் உள்ளிட்ட கட்டடங்கள் மீது ரஷ்ய படைகள் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.இதனால்,உக்ரைன் மக்கள் அண்டை நாடுகளுக்கு தஞ்சம் அடைந்து வருகின்றனர்.

மேலும்,ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகத்தின்ன் உயர் அதிகாரி ஒருவர், மார்ச் 3 ஆம் தேதி  கெர்சன் முழுப் பகுதியையும் அவர்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததாகக் கூறினார்.

முதல் முறையாக ரஷ்ய இராணுவம்:

இந்நிலையில்,ரஷ்யாவால் கைப்பற்றப்பட்ட தெற்கு உக்ரைன் நகரமான கெர்மசன் நகரில் சிக்கி தவித்த மூன்று இந்தியர்கள் ரஷ்ய இராணுவத்தின் உதவியுடன், பத்திரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். அதில் இந்தியாவை சேர்ந்த ஒரு மாணவர் மற்றும் இரண்டு வியாபாரிகள் அடங்குவர்.முதல் முறையாக ரஷ்ய இராணுவம் உக்ரைனில் இருந்து இந்தியர்கள் வெளியேற்ற உதவியுள்ள தருணம் இதுவாகும்.

மேலும்,மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரகம் இந்த மூன்று இந்தியர்களை Simferopol (கிரிமியா) மற்றும் மாஸ்கோ வழியாக வெளியேற்றுவதற்கு உதவியுள்ளது.

இது குறித்து,மாஸ்கோவில் உள்ள தூதரகத்தின் அதிகாரி ஒருவர் கூறுகையில்: “நாங்கள் Simferopol க்கு பஸ் ஏற்பாடு செய்திருந்தோம். பின்னர்,அங்கிருந்து அவர்கள் மூவரும் செவ்வாய்க்கிழமை தங்கள் விமானத்தில் பயணித்தனர்.அதில் சென்னை செல்லும் மாணவர் ஒருவர் மற்றும் அஹமதாபாத்தை சேர்ந்த வணிகர்கள் இருவரும் இருந்தனர்,என்று தெரிவித்தார்.

ஆபரேசன் கங்கா:

இதனிடையே,உக்ரைனில் உள்ள இந்தியர்கள் மத்திய அரசின் ஆபரேசன் கங்கா நடவடிக்கையின் கீழ் அண்டை நாடுகள் வழியாக தாயகம் அழைத்து வரப்படுகின்றனர்.

அந்த வகையில்,இதுவரை உக்ரைனில் உள்ள 22,000 க்கும் மேற்பட்ட இந்தியர்களில் 17,000 க்கும் மேற்பட்டவர்கள் மத்திய அரசால் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு விமானங்கள் மூலம் பத்திரமாக இந்தியா அழைத்து வரப்பட்டுள்ளனர்.அவர்கள் அனைவரும் உக்ரைனின் மேற்கு எல்லைகளில் இருந்து போலந்து, ஹங்கேரி, ருமேனியா மற்றும் ஸ்லோவாக் குடியரசு வழியாக இந்தியா திரும்பினர்.

நன்றி தெரிவித்த பிரதமர் மோடி:

ஆனால்,தற்போது 3 இந்தியர்கள் உக்ரைனின் கிழக்கு எல்லை மற்றும் ரஷ்யா வழியாக வெளியேறியுள்ளனர்.இப்பகுதி வழியாக இந்தியர்கள் வெளியேறுவது இதுவே முதல் முறையாகும்.இதனையடுத்து,இந்த நடவடிக்கையின் வெற்றிக்காக உழைத்த தன்னார்வக் குழுக்கள், நிறுவனங்கள், தனியார் நபர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்திருந்தார்.

மீட்கும் நடவடிக்கை -திருப்தி:

மேலும்,உக்ரைன் மற்றும் அதன் அண்டை நாடுகளின் தலைவர்களுடனான தனது தனிப்பட்ட தொடர்புகளை நினைவு கூர்ந்தார் மற்றும் அனைத்து வெளிநாட்டு அரசாங்கங்களிடமிருந்தும் பெற்ற ஆதரவுக்கும் பிரதமர் நன்றி தெரிவித்தார்.மேலும்,ஆபரேசன் கங்கா நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை கலந்துரையாடினார்.

அப்போது உக்ரைன், போலந்து, ஸ்லோவாக்கியா, ருமேனியா மற்றும் ஹங்கேரி ஆகிய நாடுகளில் உள்ள இந்திய சமூகம் மற்றும் தனியார் துறையின் பிரதிநிதிகள்,உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இருந்ததன் அனுபவங்களையும் மற்றும் இந்த நடவடிக்கையில் பங்களிப்பதில் உள்ள தங்கள் திருப்தியையும் வெளிப்படுத்தினர்.

Recent Posts

GT vs MI : மாஸ் காட்டுவாரா ரோஹித்? டாஸ் வென்ற பாண்டியா பந்துவீச முடிவு.!

அகமதாபாத் : ஐபிஎல் தொடரில் முதல் போட்டியில் தோல்வியடைந்த குஜராத் - மும்பை அணிகள் இன்று மோதுகின்றனர். அகமதாபாத் நரேந்திர…

10 minutes ago

தனக்குத்தானே எக்ஸ் தளத்தை வியாபாரம் செய்த எலான் மஸ்க்.! வாங்குனது எவ்வளவு? விற்றது எவ்வளவு?

அமெரிக்கா : உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலோன் மஸ்க், முன்னதாக ட்விட்டர் என்று அழைக்கப்பட்ட  X-ஐ, தனது சொந்த…

13 minutes ago

ஜிவி – அனி சம்பவம்.., ஆட்டம் போட வைக்கும் ‘குட் பேட் அக்லி’ படத்தின் செகண்ட் சிங்கிள்.!

சென்னை : இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள "குட் பேட் அக்லி" திரைப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி…

1 hour ago

சினிமா சான்ஸ்… எங்கள் பெயரை சொல்லி மோசடி.! கமல் தயாரிப்பு நிறுவனம் எச்சரிக்கை.!

சென்னை : நடிகர் கமல்ஹாசனுக்கு சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் (RKFI) ஒரு முக்கியமான எச்சரிக்கை அறிவிப்பை…

2 hours ago

உசிலம்பட்டி காவலர் கொலை வழக்கு : கஞ்சா வியாபாரி என்கவுண்டர்.!

மதுரை : மதுரை மாவட்டம் கள்ளபட்டியைச் சேர்ந்த முத்துக்குமார் உசிலம்பட்டி காவல் நிலையத்தில் முதல் நிலைக் காவலராகவும், காவல் ஆய்வாளரின்…

2 hours ago

தோனியின் கண் முன்னே… கலீல் அகமதுவை தள்ளிவிட்ட விராட் கோலி.! வைரல் வீடியோ…

சென்னை : ஐபிஎல்-ல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான நேற்றைய போட்டியில், பெங்களூரு…

3 hours ago