உக்ரைன் வணிக வளாகம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்திய ரஷ்யா..!

Default Image

உக்ரைன் வணிக வளாகம் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் சிக்கி 16 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

கடந்த நான்கு மாதங்களாக உக்ரைன் மற்றும் ரஷ்யா நாடுகளுக்கு இடையே கடுமையான போர் நீடித்து வருகிறது. தற்போது வரை போரின் தாக்கம் குறையாமல் இருந்து வருகிறது. இதன் காரணத்தால் லட்சக்கணக்கான மக்கள் நாட்டை விட்டு வெளியேறி அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். ரஷ்யா நடத்தி வரும் போர் தாக்குதலில் பல்வேறு உயிர்சேதம், பொருட்சேதம் ஏற்பட்டுள்ளது.

ரஷ்யா, உக்ரைனில் இருக்கும் முக்கியமான துறைமுகங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் தற்போது கிழக்கு உக்ரைனில் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் உள்ள வணிக வளாகத்தை நோக்கி ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால் வணிக வளாக கட்டிடம் முழுவதும் தீப்பற்றி எரிந்துள்ளது. இதில் சிக்கி 16 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 50க்கும் அதிகமானோர் படுகாயமடைந்து உள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்