தயாரிப்பாளர்களுக்கு உதவும் வகையில் தனது சம்பளத்தை 50% குறைப்பதாக ரகுல் ப்ரீத்தி சிங் அறிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டது மட்டுமில்லாமல் வேலைநிறுத்தமும் செய்யப்பட்டுள்ளது. இதனால் பலரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் பல படங்களின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதனால் ஹரிஷ் கல்யாண், விஜய் ஆண்டனி, மகத் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் தங்களது சம்பளத்தை குறைக்க தயாராக உள்ளதாக அறிவித்திருந்தார்கள். இதனால் தயாரிப்பாளர்கள் சிறிது மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும் முன்னணி நடிகர் மற்றும் நடிகைகள் தாமாக முன்வந்து சம்பளத்தை குறைக்க தயாராக வேண்டும் என்று தயாரிப்பாளர்களின் வேண்டுகோளாக உள்ளது.
இந்த நிலையில் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் ரகுல் ப்ரீத்தி சிங் தனது சம்பளத்தில் 50% குறைக்க தயாராக உள்ளதாக அறிவித்துள்ளார். இவர் தற்போது கமல்ஹாசனின் இந்தியன் 2 மற்றும் சிவக்கார்த்திகேயனின் அயலான் படத்திலும் நடித்து வருகிறார். கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள தயாரிப்பாளர்களின் நிலையை மனதில் கொண்டு தனது சம்பளத்தை 50% ஆக குறைத்துள்ளார். ஏற்கனவே 1.5கோடி ரூபாய் வரை சம்பளமாக வாங்கும் ரகுல் ப்ரீத்தி இனி ரூ. 75லட்சத்திற்கு நடிக்க தயாராக உள்ளதாக அறிவித்துள்ளார்.
பஹல்காம் : ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல் சம்பவம்…
ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் ஏப்ரல் 22 மாலை நடந்த பயங்கரவாத தாக்குதலில்…
நாட்டையே உலுக்கிய ஜம்மு-காஷ்மீர் பாஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட பயங்கர பயங்கரவாதத் தாக்குதலுக்கு ஒரு நாள் கழித்து, பாகிஸ்தான்…
ஸ்ரீநகர் : இந்தியர்களுக்கு மற்றுமொரு கருப்பு நாளாக காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் அமைந்திருக்கிறது. ஆம், நேற்றைய தினம் ஜம்மு…
ஸ்ரீநகர் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தில் இதுவரை வெளியான தகவலின்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தில் இதுவரை வெளியான தகவலின்…