தயாரிப்பாளர்களுக்கு உதவும் வகையில் தனது சம்பளத்தை 50% குறைப்பதாக ரகுல் ப்ரீத்தி சிங் அறிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டது மட்டுமில்லாமல் வேலைநிறுத்தமும் செய்யப்பட்டுள்ளது. இதனால் பலரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் பல படங்களின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதனால் ஹரிஷ் கல்யாண், விஜய் ஆண்டனி, மகத் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் தங்களது சம்பளத்தை குறைக்க தயாராக உள்ளதாக அறிவித்திருந்தார்கள். இதனால் தயாரிப்பாளர்கள் சிறிது மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும் முன்னணி நடிகர் மற்றும் நடிகைகள் தாமாக முன்வந்து சம்பளத்தை குறைக்க தயாராக வேண்டும் என்று தயாரிப்பாளர்களின் வேண்டுகோளாக உள்ளது.
இந்த நிலையில் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் ரகுல் ப்ரீத்தி சிங் தனது சம்பளத்தில் 50% குறைக்க தயாராக உள்ளதாக அறிவித்துள்ளார். இவர் தற்போது கமல்ஹாசனின் இந்தியன் 2 மற்றும் சிவக்கார்த்திகேயனின் அயலான் படத்திலும் நடித்து வருகிறார். கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள தயாரிப்பாளர்களின் நிலையை மனதில் கொண்டு தனது சம்பளத்தை 50% ஆக குறைத்துள்ளார். ஏற்கனவே 1.5கோடி ரூபாய் வரை சம்பளமாக வாங்கும் ரகுல் ப்ரீத்தி இனி ரூ. 75லட்சத்திற்கு நடிக்க தயாராக உள்ளதாக அறிவித்துள்ளார்.
சென்னை : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மும்மொழிக் கொள்கை குறித்த விவாதத்தில் பேசிய மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான், திமுக…
கோவை : கடந்த மார்ச் 7ஆம் தேதியன்று இஸ்லாமியர்கள் விழாவான ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் சென்னை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2ஆம் கட்ட அமர்வு தொடங்கியுள்ளது. இதில் இன்று கேள்வி பதில் நேரத்தில்…
துபாய் : நேற்று இந்திய கிரிக்கெட் அணி, கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் 2வது ஐசிசி கோப்பையை கைப்பற்றியது. 2025…
துபாய் : துபாய் சர்வதேச மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியா நியூசிலாந்தை நான்கு…
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்கியது. இதில் கலந்து கொண்டு மத்திய கல்வி…