சிதைந்த துருக்கி.. அழிந்த வரலாற்று தடயங்கள்.. உதவிக்கு ஓடி வரும் அண்டை நாட்டினர்.!

Published by
மணிகண்டன்

துருக்கியில் 1999இல் 7.4 ரிக்டர் அளவிலும், அதற்கு முன்னதாக 1939ஆம் ஆண்டு 7.8ரிக்டர் அளவிலும் நிலநடுக்கம் துருக்கியை தாக்கியுள்ளது. 

நேற்று உலகையே அதிர வைத்த பேரிடர் சம்பவம் தான் துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம். இந்த நிலநடுக்கத்தால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து, பலர் இடிபாடுகளில் சிக்கி தவித்து அவர்களை மீட்கும் பணிகளில் மீட்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

சிரியா எல்லையான தென்கிழக்கேயும், துருக்கியின் ஒரு பகுதியான காஸியான்டெப்பிலிருந்து (Gaziantep) 33 கிலோமீட்டர் தொலைவில், நூர்டாகி நகரத்திலும் நேற்று அதிகாலை 3.20 மணிக்கு அதிபயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்க அளவானது, ரிக்டர் அளவுகோலில் 7.8 என பதிவாகியது. 7;5 அளவுகளின் அதே இடத்தில் இரண்டாவது முறையாக பிற்பகலில் ஏற்பாட்டது. அதனை தொடர்ந்து, நேற்று இந்திய நேரப்படி மாலை 6 மணியளவில் 6.0 ரிக்டர் எனும் அளவுகளில் மூன்றாவது முறையாகவும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் பெரும் அச்சத்தில் இருக்கின்றனர்.

நேற்று மாலை 4.00 நிலவரப்படி, துருக்கியில் 900க்கும் அதிகமானோர் இறந்ததாகவும், சிரியாவில் 500க்கும் மேற்பட்டோர் இறந்ததாகவும், மொத்தமாக 1,400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலநடுக்கத்தில், துருக்கி முக்கிய வரலாற்று சின்னமான 2200 ஆண்டுகள் பழமையான காஸியான்டெப்கோட்டை முற்றிலும் சிதைந்தது.  அதே போல, துருக்கியின் பேரிடர் மற்றும் அவசரநிலை மேலாண்மை நிறுவனமும், ஐரோப்பிய ஒன்றியமும் தங்கள் சார்பில் மீட்புக்குழுக்களை அனுப்பி வைத்து மீட்பு பணிகளை முடிக்கிவிட்டுள்ளன. 

அதே போல அண்டை நாடுகளான, நெதர்லாந்து, ருமேனியாவிலிருந்தும் மீட்புப்படையினர் உதவி செய்ய முன் வந்துள்ளனர். நமது பிரதமர் மோடி நேற்று பெங்களூரு விழாவில் பேசுகையில் கூட, துருக்கி நிலநடுக்கத்திற்கு இரங்கல் தெரிவித்து விட்டு, நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கிக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய இந்தியா தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.

துருக்கி நிலநடுக்க பாதிக்கபடும் பகுதியாக அறியப்பட்டு வருகிறது. அங்கு இதே போல, 1999இல் டஸ்ஸில் எனும் பகுதியில் 7.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.  அப்போது 17,000க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். அதற்கு முன்னதாக 1939ஆம் ஆண்டு 7.8ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் துருக்கியை சிதைத்துள்ளளது. அப்போது கிழக்கு எர்சின்கான் மாகாணத்தில் 33,000 பேர் உயிரிழந்த்துளள்னர் என்பது குறிப்பிடத்தக்து.

Published by
மணிகண்டன்

Recent Posts

WWT20 : கியானா ஜோசப் அதிரடி ..! ஸ்காட்லாந்தை எளிதில் வென்று வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி அபாரம்..!

துபாய் : டி20 மகளிர் கோப்பைத் தொடரில் இன்று நடைபெற்ற 8-வது போட்டி துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…

4 hours ago

கோலாகலமாக தொடங்கிய பிக் பாஸ் சீசன் 8! போட்டியாளர்கள் யாரெல்லாம் தெரியுமா?

சென்னை : பிக் பாஸ் தமிழ் சீசன் நிகழ்ச்சி எப்போது தொடங்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், தற்போது…

4 hours ago

IND vs BAN : வங்கதேசத்தை வென்ற இளம் இந்தியப் படை! 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!

குவாலியர் : வங்கதேச அணி, இந்தியாவில் மேற்கொண்டு வரும் சுற்று பயணத்தில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 2-0 என…

5 hours ago

கைகொடுத்த நிதான பேட்டிங்..! பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய மகளிர் அணிக்கு முதல் வெற்றி..!

துபாய் : நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரின் இன்றைய 7-வது போட்டியில் இந்திய மகளிர் அணியும், பாகிஸ்தான் மகளிர்…

8 hours ago

வங்கதேச அணியை பொட்டலம் செய்த இங்கிலாந்து மகளிர் அணி! தொடரின் முதல் வெற்றியைப் பெற்று அசத்தல்!

ஷார்ஜா : நடைபெற்று வரும் டி20 உலககோப்பைத் தொடரின் இன்றைய போட்டியில் வங்கதேச மகளிர் அணியும், இங்கிலாந்து மகளிர் அணியும்…

1 day ago

கெத்து காட்டிய பெத் மூனி ..! 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்திய ஆஸ்திரேலிய மகளிர் அணி!

ஷார்ஜா : நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரின் 5-வது போட்டியான இன்று  ஆஸ்திரேலிய மகளிர் அணியும், இலங்கை…

1 day ago