கால்பந்தாட்ட வீரர் ரொனால்டினோ..!ஒரேநேரத்தில் 2 பெண்களைத் திருமணம் செய்ய உள்ளதாக தகவல்..!!

Default Image

பிரேசில் கால்பந்தாட்ட வீரர் ரொனால்டினோ ஒரேநேரத்தில் 2 பெண்களைத் திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

38வயதான ரொனால்டினோ 2016ஆம் ஆண்டில் இருந்து பட்ரிஸ் சூசா எனும் பெண்ணை காதலித்து வருகிறார்.இதேபோல் பிரிஸ்கில்லா கோலோ எனும் பெண்ணுடனும் அவர் பழகி வந்தார். இந்த இரு பெண்களுடனும் கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து ரியோ டி ஜெனிரோவில் உள்ள வீட்டில் ரொனால்டினோ வாழ்ந்து வருகிறார்.

2017ஜனவரி மாதமே இருவரையும் திருமணம் செய்வதற்கான மோதிரத்தை ரொனால்டினோ அணிவித்துள்ளார். இருவரின் செலவுக்கும் மாதந்தோறும் ஒரு லட்சத்து 36ஆயிரம் ரூபாயையும் ரொனால்டினோ வழங்கி வருகிறார்.

இந்நிலையில் வரும் ஆகஸ்டு மாதம் ரியோ டி ஜெனிரோவில் நடைபெறும் விழாவில் இருவரையும் ஒரேநேரத்தில் ரொனால்டினோ திருமணம் செய்துகொள்ள உள்ளதாக பிரேசில் நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது. இருவருக்கும் ஒரே வகையான பரிசுகளையே ரொனால்டினோ வாங்கியுள்ளதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்