நடிகை ரோஜா, அல்லு அர்ஜுனின் புஷ்பா படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவில் 90ஸில் ஏராளமான படங்களில் நடித்து பிரபலமானவர் ரோஜா. இவர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பல முன்னணி ஹீரோகளுடன் நடித்துள்ளார்.இயக்குனர் ஆர். கே. செல்வமணியின் மனைவியான இவர் ஆந்திரா மாநிலத்தில் உள்ள நகரி என்ற தொகுதியின் எம். எல். ஏ மற்றும் ஓய்.எஸ்.ஆர் என்ற காங்கிரஸ் கட்சியின் தலைவரும் ஆவர்.இவர் கடைசியாக 2015ல் கில்லாடி, புலன் விசாரணை 2 உள்ளிட்ட ஒரு சில படங்களிலே நடித்தார். அதனையடுத்து இவர் சினிமாவிலிருந்து விலகி அரசியல் பக்கம் கவனம் செலுத்த தொடங்கி விட்டார். தற்போது இவர் 5 ஆண்டுகள் கழித்து சினிமாவில் ரீ என்ட்ரி கொடுக்கவுள்ளார். ஆம் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் புஷ்பா படத்தில் ஒரு நெகட்டிவ் கேரக்டரில் ரோஜா அவர்கள் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
கடத்தல் சம்பந்தப்பட்ட கதையம்சத்தை கொண்ட புஷ்பா படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறது. மேலும் இந்த படத்தில் ரஷ்மிகா மந்தனா அல்லுக்கு ஜோடியாக நடிக்கிறார்.மேலும் இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வில்லனாகவும் நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தை சுகுமார் இயக்க தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் உருவாகும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ரும் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. 5 வருடங்கள் கழித்து ரிஎன்டரி கொடுக்கும் ரோஜாவினை மீண்டும் திரையில் பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர்.
சென்னை : தவெக தலைவர் விஜய்யை தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சென்னையில் இன்று இரண்டாவது நாளாக சந்தித்து…
மதுரை : நகைச்சுவை நடிகராக நடித்து தற்போது ஹீரோவாக மாஸ் காட்டி வரும் நடிகர் சூரி, ஹீரோவான பிறகும் நகைச்சுவை…
சென்னை : நடிகை த்ரிஷாவின் எக்ஸ் தள பக்கத்தில் திடீரென க்ரிப்டோ கரன்சி விளம்பரம் வந்ததால், ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதில், அவர்…
அகமதாபாத் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி நாளை (பிப்ரவரி 12 ஆம் தேதி)…
சென்னை : தவெக தலைவர் விஜய்யை தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சென்னையில் இன்று இரண்டாவது நாளாக சந்தித்து…
அமெரிக்கா : இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான பிரச்சனை நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகிறது. இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களின்போது பல ஆயிரம்…