ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபூலில் அமைந்துள்ள ஜனாதிபதி கட்டிட அருகே ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானை விட்டு வெளிநாட்டுப் படைகள் திரும்பப் பெற்றதிலிருந்து ஆப்கானிஸ்தானில் உள்ள முக்கிய நகரங்களைக் கைப்பற்ற தலிபான்கள் அதிகளவில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இப்போது ஆப்கானிஸ்தானில் மூன்றில் ஒரு பகுதியை வைத்திருப்பதாக கூறப்படுகிறது. அமெரிக்கா மற்றும் மேற்கத்திய படைகள் செப்டம்பர் 11-க்குள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறயுள்ளனர்.
இந்நிலையில், காபூலின் பர்வான் பகுதியில் இருந்து ஒரு காரில் இருந்து மூன்று ஏவுகணைகள் ஏவப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த ஏவுகணைகள் பாக்-இ அலி மர்தான், சாமன்-இ ஹுசூரி மற்றும் போலீஸ் மாவட்ட பகுதியில் விழுந்தன. ஒரு ஏவுகணை பக்ரீத் தொழுகையின் காபூல் ஜனாதிபதி மாளிகை அருகே விழுந்ததாக உள்ளூர் வட்டார செய்தி தெரிவிக்கின்றன.
உள்ளூர் செய்தி ஊடகங்களின்படி, இந்த ராக்கெட்டுகள் உள்ளூர் நேரப்படி காலை 8 மணியளவில் கார் மூலம் ஏவப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் எவ்வளவு சேதம் ஏற்பட்டது என்பது தெரியவில்லை. இதற்கிடையில், வெளிநாட்டுப் படைகள் திரும்பப் பெற்ற ஆறு மாதங்களுக்குப் பிறகுதான் ஆப்கானிய அரசு வீழ்ச்சியடையக்கூடும் என்ற அச்சமும் உள்ளது. மறுபுறம், தலிபான் ஆட்சிக்கு திரும்புவது குறித்து மக்கள் மத்தியில் அச்சம் உள்ளது.
ஜெய்ப்பூர் : ஐபிஎல் 2025-இன் 36-வது போட்டி இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது.…
ஜெய்ப்பூர் : இந்தியன் பிரீமியர் லீக் 2025 இன் 36வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள்…
கொச்சி : போதைப்பொருள் விவகாரத்தில் கேரளாவில் உள்ள எர்ணாகுளம் காவல் நிலையத்தில் ஆஜரான நடிகர் ஷைன் டாம் சாக்கோ கைது…
சென்னை : மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ இன்று அறிவித்துள்ளார். இந்த…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், குஜராத் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில்…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இன்று 2 முக்கிய போட்டிகள் நடைபெறுகிறது. GT vs…